அகதா கிறிஸ்டி
அகதா கிறிஸ்டி (Agatha Christie, செப்டம்பர் 15 1890 - ஜனவரி 12 1976), உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர். மேரி வெஸ்ட்மாகொட் (Mary Westmacott) என்ற பெயரில் காதற் புனைவுகளையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரது 66 மர்ம நாவல்களுக்காகவே பரவலாக அறியப்படுகிறார். மர்ம நாவல் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றியவராகக் கருதப்படுகிறார். இவரது மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) 1952 நவம்பர் 25 அன்று முதலில் திரையிடப்பட்டது. அது 2006 இலும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 20,000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டுச் சாதனை படைத்துள்ளது. ஓர் அமெரிக்கத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்தவரான அகதா கிறிஸ்டி ஒருபோதும் அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருக்கவோ அதற்காக விண்ணப்பிக்கவோ இல்லை. 12 சனவரி 1976இல் தனது 85ஆம் வயதில் வயது மூப்பின் காரணமாக இறந்தார்.[1][2] மேற்கோள்கள்
வெளியிணைப்பு |
Portal di Ensiklopedia Dunia