அகரம்மேல் பச்சை வண்ணப்பெருமாள் கோயில்
அகரம்மேல் பச்சை வண்ணப்பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், அகரம்மேல் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] கோயில் அமைப்புஇக்கோயிலில் ஹரித வாரணப்பெருமாள், மரகதத வல்லித் தாயார் சன்னதிகளும், ஸ்ரீமுதலியாண்டான், ஸ்ரீஆழ்வாராதிகள், ஸ்ரீராமர், ஸ்ரீரங்கநாதர், ஆஞ்சநேயர், ஆண்டாள், ஸ்ரீகருடன், ஸ்ரீமணவாள மாமுனிகள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்திரை புனர்வசு சாற்றுமுறை திருவிழாவாக நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia