அக்டோபர் 2010 சுமாத்திரா நிலநடுக்கம்
அக்டோபர் 2010 சுமாத்திரா நிலநடுக்கம் என்பது இந்தோனேசியாவின் சுமாத்திராக் கரையில் 2010 அக்டோபர் 25 இல் இடம்பெற்ற 7.7 அளவு[1] நிலநடுக்க நிகழ்வைக் குறிக்கும். இது உள்ளூர் நேரப்படி இரவு 09:42 மணிக்கு (14:42 UTC) இடம்பெற்றதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் கணிப்பு தெரிவிக்கிறது. சுமாத்திராவில் மென்டவாய் தீவுகளுக்கு அருகே பெங்கூலுவுக்கு மேற்கே 240 கி.மீ. தூரத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியது. இதன் ஆழம் 20.6 கி.மீ. ஆகும்[6][7]. சுனாமி எச்சரிக்கையை இந்தோனேசிய காலநிலை அவதானிப்பு நிலையம் விடுத்தது[8]. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் அறிக்கையின்படி இந்நிலநடுக்கம் "குறிப்பிடத்தக்களவு" ஆழிப்பேரலையைத் தோற்றுவித்துள்ளது[9]. மென்டவாய் தீவுகளில் உள்ள சுற்றுலா மையத்தில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானது[10].[11]. குறைந்தது 113 பேர் இறந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[12], மேலும் 500 இற்கும் அதிகமானோரைக் காணவில்லை[13]. முண்டெய் என்ற கிராமத்தில் 80 விழுக்காடு கட்டடங்கள் சேதமடைந்தன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia