அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய்
அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய் (Aswathy Thirunal Gowri Lakshmi Bayi ) (பிறப்பு 1945) முன்னாள் திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஆவார். இவர் சுமார் பத்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.[1] இவர், திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மனின் மருமகளாவார்.[2] பிறப்பும் கல்வியும்திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த மகாராணி கார்த்திகை திருநாள் லட்சுமி பாய், ஜி. வி. ராஜா ஆகியோருக்கு 1945 சூலை 4 அன்று மூன்றாவது குழந்தையாக பிறந்தார். அவிட்டம் திருநாள் ராம வர்மன் (1938-1944), பூசம் திருநாள் கௌரி பார்வதி பாய் (1941) மற்றும் மூலம் திருநாள் ராம வர்மன் (1949) ஆகியோர் இவரது உடன்பிறப்புகள் ஆவர்.[3] இவர் தனது உடன்பிறப்புகளுடன் ஆங்கிலோ-இந்தியன் ஆசிரியர்களால் வீட்டிலேயே கல்வி கற்றார். பள்ளிக்கல்வி முடிந்ததும், திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் சேர்ந்து 1966 இல் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். திருமணம்1963 ஆம் ஆண்டில் தனது 18 வயதில், அசுவதி திருநாள் திருவல்லாவின் பாளையக்காரர் மேற்கு அரண்மனையின் 26 வயதான விசாகம் திருநாள் சுகுமாரன் ராஜ ராஜ வர்மன் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு வளர்ப்பு மகளும் இருந்தனர். ராஜ ராஜ வர்மன் 2005 திசமபர் 30 அன்று வாகன விபத்தில் ஏற்பட்ட காயங்களால் இறந்தார். இலக்கியப் படைப்புகள்திருவிதாங்கூர் கோயில்கள், கேரள கோயில் கட்டிடக்கலை போன்ற பாடங்களில் அசுவதி திருநாள் பல புத்தகங்களையும், மூன்று ஆங்கிலக் கவிதைகள், செய்தித்தாள்களில் ஏராளமான கட்டுரைகள், இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி 12 புத்தகங்களை எழுதியுள்ளார். விமர்சகர்களின் கூற்றுப்படி, 1998 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இவரது நூலான சிறீ பத்மநாப சுவாமி கோயில், என்ற படைப்பு பண்டைய கோயில் பற்றிய விரிவான படைப்பாகக் கருதப்படுகிறது. இது மிகவும் பிரபலமானது. மேலும் பல பதிப்புகளில் வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தை மலையாளத்தில் கே.சங்கரன் நம்பூதிரி, கே.ஜெயக்குமார் ஆகியோர் 1998 இல் மொழிபெயர்த்தனர்.[4] தமிழில் இந்நூல் கமலா பத்மகிரீசுவரனின் மொழிபெயர்ப்பில் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia