அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 21. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதியில் படித்தவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். தெலுங்கு பேசக்கூடிய நாயுடு சமுதாயத்தினர் 35 சதவீதம் பேர் உள்ள்னர். தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் குடிசை மாற்று வாரிய பகுதிகள் இத்தொகுதியில் அதிகம் உள்ளன. அமைந்தகரை, அரும்பாக்கம், டி.பி.சத்திரம், எம்.எம்.டி.ஏ. காலனி, செனாய் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இதில் அடங்கும். அரும்பாக்கம் ராணி அண்ணாநகர், டி.பி.சத்திரம், நடுவங்கரை, எம்.ஜி.ஆர்.காலனி என்.எஸ்.கே.நகர், பொன்வேல் பிள்ளை தோட்டம், அமைந்தகரை மார்க்கெட் பகுதிகளில் குடிசைவாசி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,86,019. அதில் ஆண் வாக்காளர்கள் 1,40,410 மற்றும் பெண்கள் வாக்காளர்கள் 1,45,522 அகவுள்ளனர். அதிமுக சார்பில் கோகுல இந்திரா, திமுக சார்பில் எம்.கே. மோகன், அ.ம.மு.க.சார்பில் குணசேகரன், மக்கள் நீதி மய்யம் பொன்ராஜ், நாம் தமிழர் கட்சி சங்கர், பகுஜன் சமாஜ் கட்சி ஜீவித் குமார் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.[1] தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்சென்னை மாநகராட்சி வார்டு எண் 66 முதல் 70 வரை மற்றும் 73 முதல் 75 வரை. வெற்றி பெற்றவர்கள்
2016 சட்டமன்றத் தேர்தல்வாக்காளர் எண்ணிக்கை, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
முடிவுகள்மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia