அண்ணா விளையாட்டு அரங்கம் - திருச்சிராப்பள்ளி10°46′54″N 78°41′45″E / 10.78167°N 78.69583°E
அண்ணா விளையாட்டு அரங்கம் (Anna Stadium) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள ஒரு விளையாட்டு அரங்கமாகும்[1][2]. 1970 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இவ்வரங்கம் 31.25 ஏக்கர் (12.65 எக்டேர்) பரப்பளவில் பரவியுள்ளது. இந்த வளாகம் ஒரு பல்நோக்கு உள்ளரங்க வளாகமாக செயல்படுகிறது. டென்னிஸ்டென்னிசு, கூடைப்பந்து, கால்பந்து மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு இங்கு தனி அரங்கங்கள் உள்ளன[3] . செயற்கை புல்தைரையால் உருவாக்கப்பட்ட ஒரு வளைகோல் பந்தாட்ட மைதான வசதியும், தடகள விளையாட்டுக்கான 400 மீட்டர் ஓடுகளப் பாதை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன [2][4]. உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் மற்றும் ஒரு விளையாட்டு விடுதி போன்ற வசதிகளும் இங்குள்ளன[5]. திருச்சியின் துணை நகரமான காச்சாமலை பகுதியில் அண்ணா விளையாட்டரங்கம் அமைந்துள்ளது. இவ்வளாகத்திலுள்ள் பிரதானமான கால்பந்து அரங்கம் மற்றும் தடகள அரங்கத்தில் 20000 பேர் அமர்ந்து பார்க்க முடியும். மேற்கோள்கள்
உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia