அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் (நூல்)அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் (ATHIRSTAM THANTHA ANUPAVANKAL) என்ற நூல் எழுத்தாளர், நடிகர், பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர் என பன்முகங்கள் கொண்ட சோ ராமசாமி எழுதியதாகும்.[1] அல்லயன்சு பதிப்பகம் நூலை வெளியிட்டது.[2] நாடகம் - சினிமா - அரசியல் - பத்திரிகை போன்ற பல துறைகளில் இவர் பெற்ற அசாதாரண அனுபவங்கள், சுவையான வினோதமான நிகழ்ச்சிகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.[3] நூலில் இடம்பிடித்த பிரபலங்கள்இப்புத்தகத்தில் இந்திராகாந்தி, எம். ஜி. ராமச்சந்திரன், மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா, ரஜினிகாந்த், வாஜ்பாய், அத்வானி, மொராஜி தேசாய், ராஜீவ் காந்தி, ஜீ.கே.மூப்பானார், ராஜாஜி, சிவாஜி கணேசன், அண்ணாதுரை, கண்ணதாசன், ப. சிதம்பரம், வை. கோபால்சாமி, சுப்பிரமணியம் சுவாமி, பக்தவச்சலம், பாலச்சந்தர், ஓ.வி.அளகேசன், எம்.எஸ்.விஸ்வநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன், ராம்நாத் கோயங்கா, சந்திரசேகர், சஞ்சீவ ரெட்டி, சரண் சிங், ராஜ்நாராயணன், சஞ்சய் காந்தி, இரா.செழியன், ஆச்சார்ய கிருபளானி, ஜெகஜீவன்ராம், மதுதண்டவதே, பாலா சாஹேப் தேவரஸ், என்.டி.ராமாராவ், சந்திரபாவு நாயுடு, எஸ்.டி.சர்மா, ஜார்ஜ் ஃபெர்னானண்டஸ், வி.எம்.ஜானகி, ஜெயவர்தன, அமிர்தலிங்கம், என பெரும் எண்ணிக்கையிலான பிரபலங்களுடன் நூலாசிரியருக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்கள் நூலில் கட்டுரைகளாக்கப்பட்டுள்ளன. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia