அந்தர்வேதி
![]() அந்தர்வேதி என்னும் ஊர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சகினேதிபள்ளி மண்டலத்தில் கோணசீமா பகுதி சோலைகள் நிறைந்து பசுமையான பகுதியாக உள்ளது. இதனால் அந்தப் பகுதி ஆந்திர கேரளா என்றே அழைக்கப்படுகிறது.[1] இந்தப் பகுதில் உள்ள ஒரு ஊர் இது ஆகும். இந்தக் கிராமம் வங்காள விரிகுடா மற்றும் கோதாவரி ஆற்றின் துணை நதியான வஷிஸ்டா கோதாவரி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது.[2] அந்தர்வேதியில் உள்ள நரசிம்மசேத்திரத்தால் பெயர்பெற்றது.[3] விளக்கம்புவியியல்ரீதியாக அந்தர்வேதி, 4 சதுர மைல் (6.4 கி.மீ.) பரப்பளவைக் கொண்டதாக உள்ளது.[3] இந்த கிராமத்தில் பாயும் வசிஷ்ட கோதாவரி ஆற்றுக்கு எதிரே புகழ்பெற்ற லக்ஷ்மிநரசிம்ம ஸ்வாமி கோயில் உள்ளது. மேலும் அந்தர்வேதியானது "இறைவனின் அருளால் இரண்டாம் வாரணாசி" என்று கூறப்படுகிறது.[3] கோதாவரி ஆற்றின் மறுபுறத்தில் உள்ள ஒரு தீவுக்கு படகு மூலம் பயணிக்கலாம். பின்னர் அங்கிருந்து கடலில் ஆறு கலக்கும் இடத்துக்குச் செல்லலாம்.[2] நிலவியல்அந்தர்வேதி 16°20′00″N 81°44′00″E / 16.3333°N 81.7333°E,[4] இல் அமைந்துள்ளது மேலும் கடல் மட்டத்துக்கு நெருக்கமாக உள்ளது. முனைவர் திரிணாதராஜு ருத்ரராஜூவின் கூற்றுப்படி, கோவில் வளாகத்தின் வடிவமைப்பு டெல்டாவின் வடிவவியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆற்றின் சங்கமத்தில் நீரோட்டத்தின் வேகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியமும் கொண்டுள்ளது.[சான்று தேவை]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia