அனாக்சிமாண்டர்
![]() அனாக்சிமாண்டர் (Anaximander, கிரேக்கம்: Ἀναξίμανδρος அனாக்சிமாண்ட்ரோசு, Anaximandros; அண். கிமு 610 – அண். கிமு 546) என்பவர் மிலெத்தெசு நகரில் (இன்றைய துருக்கியில்) வாழ்ந்த சாக்கிரட்டீசுக்கு முற்பட்ட காலக் கிரேக்க மெய்யியலாளர் ஆவார்.[3] அனாக்சிமாண்டர் தேலேசுவின் மாணவர் என்பதைத் தவிர இவர் வாழ்க்கையைப் பற்றி ஏதும் தெரியவில்லை. தனது ஆய்வுகளை எழுத்தில் எழுதி வைத்த முதலாவது மெய்யியலாளர் இவரெனக் கூறப்படுகிறது.[4] இவரோடு பல கண்டுபிடிப்புகள் தொடர்பு படுத்தப்படுகின்றன. இவர் சூரியக் கடிகைகைக்கான "குனோமோன்" (gnomon) என்ற கருவியை கிரேக்கத்திற்கு அறிமுகம் செய்தார். அதைக் கொண்டு துல்லியமாக இரு சிறும, பெரும கதிர்மீள்வு நாட்களைக் கண்டுபிடித்ததோடு இரு சமபகலிரவு நாட்களையும் கணித்துள்ளார்.[5] இவை ஆண்டின் பருவக் காலங்களோடு தொடர்புடையவை. நீரியல் சுழற்சி பற்றி முதலில் கூறியவர் இவரே. இவர் தொல்பாழ் (Archie)/ (apeiron) என்பதில் இருந்தே அனைத்துப் பொருள்களும் உருவாகின என்ற ஒருமைத் தோற்றக் கருத்தினைக் கூறியவர். 'இயற்கை பற்றி' என இவர் எழுதிய முதல் மெய்யியல்-சார்ந்த கிரேக்க நூல் கிடைக்கவில்லை. விண்ணுலகின் தோற்றம், புவியின் தோற்றம், மாந்தத் தோற்றம் பற்றி விளக்கும் படிவளர்ச்சி/மலர்ச்சிக் கண்ணோட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தி, புவிப்பரப்பு வளைந்துள்ளதையும் கிழக்கு மேற்காக புவி உருளைவடிவில் புடவியின் மையத்தில் அமைந்துள்ளதாகவும் கூறி, முதல் உலக நிலவரையையும் வரைந்துள்ளார். மேலும் புவியைச் சுற்றி மூன்று வலயங்களில் சூரியனும் நிலாவும் விண்மீன்களும் அமைந்துள்ளதாகக் கூறினார்.[6] அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia