அப்புசாமி (கற்பனைக் கதைமாந்தர்)
அப்புசாமி (appusaamy) எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் எழுதப்பட்ட புதினங்களிலும் சிறுகதைகளிலும் வரும் முக்கிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். முதன்முதலாக 1963 ஆம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த சிறுகதைகளில் இக்கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு தலைமுறைகளாக பல்வேறு கதைகளிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் நாடகங்களிலும் அப்புசாமி என்ற இக்கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.[1][2][3] சென்னையில் உள்ள ஒரு நகைச்சுவை மன்றத்திற்கு இக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும் இத்தொடர் கதைகளை ஊக்குவிக்கும் வகையிலும் "அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை மன்றம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.[4] பாக்கியம் ராமசாமிஎழுத்தாளர் ஜ. ரா. சுந்தரேசன் (செப்டம்பர் 1, 1930 to டிசம்பர் 8, 2017) அவர்களின் புனைபெயர் பாக்கியம் ராமசாமி ஆகும்.[5]. தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டபுரம் என்ற ஊரில் இவர் பிறந்தார் இவரது தாயார் பெயரான பாக்கியம் மற்றும் தந்தையின் பெயரான ராமசாமி இரண்டையும் இணைத்து இந்த புனைப் பெயரான "பாக்கியம் ராமசாமி" என்பதை சூட்டிக்கொண்டார். 1963ம் ஆண்டு குமுதம் வார இதழில் "அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்" என்ற கதையின் மூலம் அப்புசாமி என்ற கதாபாத்திரத்தை தமிழ்ச் சிறுகதை உலகில் நகைச்சுவை கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தியுள்ளார். அதுமுதல் எண்ணற்ற நாவல்களையும் நாடகங்களையும் சிறுகதைகளையும் அப்புசாமி, சீதாப்பாட்டி போன்ற அதே கதாபாத்திரங்களை உபயோகப்படுத்தி எழுதியுள்ளார். யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, ஜ்வாலாமாலினி போன்ற பல்வேறு புனைபெயர்களில் பயன்படுத்தியும் பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.குமுதம் வார இதழில் எழுத்தாளராக பணியாற்றிய இவர் 1990ஆம் ஆண்டு அதே இதழில் இணை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.[6][7] புத்தகங்கள்இதுவரை 30-க்கும் மேற்பட்ட புதினங்கள் மற்றும் குறுநாவல்கள் அப்புசாமி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.[8] இவற்றில் பெரும்பான்மையானவை குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்து பின்னர் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளது ஓவியர் ஜெயராஜ் இக்கதாபாத்திரத்திற்கு ஓவியம் வரைந்துள்ளார்.
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia