அமர் சிங் (அரசியல்வாதி)
அமர் சிங் (Amar Singh, Hindi: अमर सिंह, 27 சனவரி 1956) இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் சமாஜ்வாடி கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவருமாவார். அவரது தூய இந்தி வன்மைக்காகவும் அரசியல் தொடர்புகளுக்காகவும் பெரிதும் அறியப்படுபவர். பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இவர்மீது நிலுவையில் உள்ளது [1][2] சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். சனவரி 6, 2010 அன்று கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவுடனான மனவேற்றுமை காரணமாக அக்கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகினார் [[3]; பின்னர் கட்சித் தலைமை அவரை அப்பதவிகளிலிருந்து நீக்கியது. நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க ஒரு கோடி ரூபாய் பணம் தரப்பட்ட எழுந்த வழக்கில் இவரது உதவியாளர் எனக் கருதப்படும் சஞ்சீவ் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார்; இவரும் இவ்வழக்கில் தொடர்புடையவராக காவல்துறை கருதுகிறது.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia