தங்கர் பச்சான், தான் எழுதிய அம்மாவின் கைப்பேசி என்ற நாவலை திரைப்படத்திற்கு ஏற்றார் போல் அமைத்துள்ளார்.[2] மேலும் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக சாந்தனு நடிக்க, செல்வி எனும் கதாபாத்திரத்தில் இனியா நடிக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரமான அம்மா வேடத்தில் நடித்துள்ளவர் காக்கும் கரங்கள் மற்றும் தனிப் பிறவி ஆகிய படத்தில் நடித்த ரேவதி என்ற பழம்பெரும் நடிகை.[3] இத் திரைப்படத்தின் கதைக்கு ஏற்ப ஒரு காட்சியில் சாந்தனுவை இனியா நெருங்கி உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது.[4][5]
அம்மாவின் கைப்பேசிதிரைப்படத்தின் இசை புதுமுக இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி மூலம் அமைக்கப்பட்டது. மேலும் சென்னைசத்தியம் சினிமாவில்அக்டோபர் 12012 ஆம் தேதி அன்று ஒலிதம் (Audio) வெளியிடப்பட்டது. மற்றும் பல புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர்களும் கலந்து கொண்டனர். அந் நிகழ்வில் ””என்ன செஞ்சிப் போற...” என்ற பாடலின் முன்னோட்டம் காட்டப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது.[6]