அம்மையப்பட்டு பிடாரி செல்லியம்மன் கோயில்
அம்மையப்பட்டு பிடாரி செல்லியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், அம்மையப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.சுயம்புவாக தோன்றிய அம்மன் இச்சன்னதியின் சிறப்பு [சான்று தேவை] கோயில் அமைப்புஇக்கோயிலில் பிடாரியம்மன் சன்னதியும், சுப்பிரமணியசுவாமி . உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஊர் மக்கள் ஒன்று திரண்டு பொங்கல் வைப்பது முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் கூழ் வார்த்தல் திருவிழாவாக நடைபெறுகிறது.உப கோவிலான முருகன் கோயிலில் ஆடி மற்றும் தை மாதத்தில் கிருத்திகை விழா மற்றும் பங்குனி உத்திரம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia