அம்மை நோய்கள் (கால்நடை)அம்மை நோய் என்பது வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் (VZV) மூலமாக தொற்றக்கூடிய நோயாகும். இது ஒரு டி.என்.ஏ வைரஸ் ஆகும். இது ஹெர்பஸ் வைரஸ் என்ற குழுவைச் சேர்ந்தது. இது முக்கியமாக குழந்தைகளை பாதிக்க கூடியது. பெரியவர்களும் கால்நடைகளும் கூட இதனால் பாதிப்படையக் கூடும். இந்த வைரஸ் உடலில் ஆங்காங்கே சிவப்பு நிற கொப்புளங்களை தோற்றுவித்து நமைச்சல், எரிச்சலை உண்டாக்கும். இந்த கொப்புளங்களில் நீர் தேங்கி பார்ப்பதற்கு கண்ணாடியை போல் காட்சியளிக்கும். அம்மை போட்ட கொஞ்ச நாட்களில் இந்த கொப்புளங்களில் இருந்து நீர் கசியத் தொடங்கி விடும். கொப்புளங்கள் முழுவதுமாக ஆறின பிறகு அந்த இடங்களில் வடுக்களை உண்டாக்கி செல்கிறது. கால்நடைகளில் அம்மைநோய்இந்த அம்மை நோய் மனிதர்களை மட்டுமல்ல கால்நடைகளில் மாடு, பன்றி, ஆடு, குதிரை, ஒட்டகம், குரங்கு போன்ற பாலூட்டிகளையும் தாக்கக் கூடியது. இந்த வைரஸ் கால்நடைகளை தாக்கி அம்மை நோயை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளின் தோல் மூலமாகவோ அல்லது சுவாசிக்கும் காற்றின் மூலமாகவோ மற்றவர்களுக்கு பரவுகிறது.[1] ஆட்டம்மைஆடுகளில் இந்த வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் ஒரு தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட செம்மறியாடுகளின் தோல் பகுதியிலும், அவற்றின் கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளின் உட்சவ்வுகளிலும் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். குறிப்பாக இந்த அம்மை நோய் வெள்ளாட்டு இனங்களை அதிகளவில் பாதிக்கிறது. ஒரு ஆட்டிடம் இருந்து மற்ற ஆட்டிற்கும், செம்மறியாட்டிற்கும் கூட இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது. பரவும் விதம்
அறிகுறிகள்
நோய் தடுப்பு முறைகள்
மாட்டம்மைஇந்த அம்மை வைரஸ் மாடுகளையும் தாக்கக் கூடியது. அம்மை வைரஸால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்தோ அல்லது மாடுகளிடமிருந்தோ மற்றவருக்கு எளிதாக தொற்றக் கூடியது. அறிகுறிகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட பசுவிற்கு கடுமையான காய்ச்சல் உண்டாகும். பால் சுரக்கும் மடிப்பகுதி, காம்புப் பகுதியில் சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள் தோன்றி அதில் நீர் தேங்கி இருக்கும். அதில் வடியும் நீரால் இந்த வைரஸ் மற்ற கால்நடைகளுக்கும் எளிதாக பரவும். தடுப்பு நடவடிக்கைகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia