அரங்கநாயகி

அரங்கநாயகி
அரங்கநாயகி தாயார் மூர்த்தி
அதிபதிஸ்ரீரங்கத்துக் பெண் கடவுள்
வகைவைணவம்
இடம்வைகுண்டம்
துணைஅரங்கநாதர்
நூல்கள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
விழாக்கள்வைகுண்ட ஏகாதசி

அரங்கநாயகி (ஆங்கிலம்: Ranganayaki, சமஸ்கிருதம்: रङ्गनायकी, romanized: Raṅganāyakī, பொருள்: 'ரங்கநாதரின் மனைவி'), ஒரு இந்து தெய்வம் ஆவார். தாயார் என்று அடைமொழியிட்டு அழைக்கப்படும் இவர்,[1] ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலின் முதன்மையான பெண் தெய்வம் ஆவார்.[2] அவள் ஸ்ரீரங்கத்தின் வழிபாட்டு தெய்வமும் விஷ்ணுவின் அவதாரமுமான ரங்கநாதரின் மனைவி. லட்சுமியின் அவதாரமான இவரை ரங்கநாயகி நாச்சியார் என்றும் பெரிய பிராட்டி என்றும் அழைப்பர்.[3]

ரங்கநாயகி ஸ்ரீரங்கத்து மக்களாலும், வைணவர்களாலும் பெரிதும் போற்றப்படும் தெய்வமாவார். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி இவர் அரங்கநாதருக்கு இணையாகக் கருதப்படுகிறார். தெய்வீக தம்பதியினரை வழிபடுவதற்கான வழிமுறைகளின் முதலும் முடிவுமாகக் கருதப்படுபவர்.

மேற்கோள் தரவுகள்

  1. Raman, K. V. (2003) [1975]. Sri Varadarajaswami Temple, Kanchi: A Study of Its History, Art and Architecture (in ஆங்கிலம்). Abhinav Publications. p. 8. ISBN 978-81-7017-026-6.
  2. Hawley, John Stratton; Wulff, Donna Marie (1998). Devī: Goddesses of India (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. pp. xii. ISBN 978-81-208-1491-2.
  3. Kumar, P. Pratap (1997). The Goddess Lakṣmī: The Divine Consort in South Indian Vaiṣṇava Tradition (in ஆங்கிலம்). Scholars Press. p. 81. ISBN 978-0-7885-0199-9.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya