அராபிய இலக்கியம்அராபிய இலக்கியம் (al-Adab al-‘Arabī, அரபு: الأدب العربي) எனப்படுவது, அரபு மொழியில் எழுதப்பட்ட உரைநடை மற்றும் கவிதைத் தொகுப்புகளை குறிப்பதாகும். அரபுலகில் இது அதாப் (أدب) என அழைக்கப்படுகின்றது. பண்டைய காலங்களில் இருந்தே பல வாய்வழி இலக்கியங்கள் இங்கு இருந்த போதும், ஐந்தாம் நூற்றான்டின் பிறகே அராபிய இலக்கியம் வளரத் தொடங்கியது. குறிப்பாக இசுலாமிய பொற்கால நேரத்தில் இது தனது உச்சத்தை தொட்டது. இந்த கால கட்டத்தில் உலகின் பல்வேறு காலாச்சாரத்தை சேர்ந்த நூல்களும், தொன்மங்களும், வரலாறுகளும், புராணங்களும் அரபிக்கு மொழிபெயற்கப்பட்டன. மங்கோலியர்களின் பாக்தாத் படையெடுப்பை அடுத்து இதில் பெரும்பான்மையானவை அழிக்கப்பட்டன[1]. பொதுவாக குரான், அரபு இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பாக கருதப்படுகின்றது[2] அரபு மொழி இலக்கியங்களில் திருக்குர்ஆன் மிகச் சிறந்த படைப்பாகப் பரவலாகக் கருதப்படுகிறது.[3][4][5][6][7] . மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia