அருப்புக்கோட்டை ஶ்ரீமத் ஏனாதிநாத நாயனார் திருமடாலயம்

ஏனாதி நாத நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சோழநாட்டிலே, எயினனூரிலே (இன்றைய ஏனநல்லூரிலே) தோன்றியவர். புரட்டாசி மாதம், உத்திராட நட்சத்திரத்து நாளன்று சிவபெருமான் ஏனாதிநாதருக்கு, அவர் எதிரே தோன்றி, பகைவனுடைய கையிலுள்ள வாளினால் பாசம் அறுத்த உயர்ந்த அன்பராகிய ஏனாதிநாதரை உடன்பிரியாப் பேற்றையளித்து மறைந்தருளினார்.


இவர் பெருமை அறிந்த அருப்புக்கோட்டை பெ.சிவ.பெருமாள் நாடார், 1901 -ஆம் ஆண்டு, ஶ்ரீமத் ஏனாதிநாத நாயனார் திருமடாலயம் அருப்புக்கோட்டையில் நிறுவியதிலிருந்து, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், உத்திராட நட்சத்திரத்தன்று, ஏனாதிநாத நாயனார் குரு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிகின்றன. அவரது 3-ஆம் தலைமுறைகள் 124-ஆம் ஆண்டு சைவத் தொண்டில் ஈடுபட்டுள்ளார்கள்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya