அவகாசியிலிக் கொள்கை

இடல்லவுசிப் பிரபு

வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse) என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த டல்ஹளசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.[1]

வாரிசு இழப்புக் கொள்கையின்படி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவராகவோ அல்லது நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னராட்சி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் இணைக்கப்படும்.

ஒன்றிணைப்பு

பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் வாரிசு இழப்புக் கொள்கை எனும் அவகாசியிலிக் கொள்கையின் படி, சதாரா (1848), செய்ப்பூர் (1849), சம்பல்பூர் (1849), நாக்பூர் (1854), சான்சி (1854), தஞ்சாவூர் மன்னராட்சி (1855), உதயப்பூர் ஆகிய மன்னராட்சிப் பகுதிகளை சொந்தமாக்கிக் கொண்டது.[2] அயோத்தி இராச்சியம் மட்டும் மோசமான ஆட்சி முறை என காரணம் காட்டி 1858ல் பிரித்தனிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.

சான்சி

சான்சியின் மகாராசா கங்காதர இராவ் நேரடி வாரிசின்றி நவம்பர் 21, 1853இல் இறந்தமையால் ஆங்கிலேயர் வாரிசு இழப்புக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வர முயற்சித்தனர்.[3] மார்ச்சு, 1854இல் இராணி இலட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து சான்சிக் கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர்.[4] ஆயினும் இராணி இலட்சுமிபாய் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் சான்சியைக் கைப்பற்றினர். ஆகையால், 1857ஆம் ஆண்டுப் ஏற்பட்ட பெரும்புரட்சியின் போது சான்சியில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இராணி இலட்சுமிபாய் தலைமை தாங்கி நடத்திட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[5]

அவத்

ஆங்கிலேயர்கள், அவத் பகுதியின் அயோத்தி இராச்சியத்தின் நவாப் ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவர் எனக் கூறி அவத் நாட்டை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஆனாலும் இவ்வொன்றிணைப்பு எதிர்க்கப்பட்டதுடன் 1857 இந்தியக் கிளர்ச்சிக்கான காரணமாகவும் அமைந்தது.[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. அவகாசியிலிக் கொள்கை (ஆங்கில மொழியில்)
  2. பண்பாட்டுச் சின்னங்களும்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "ஜான்சிராணி நினைவுநாள்". Archived from the original on 2016-03-04. Retrieved 2012-05-05.
  4. சான்சி இராணி இலட்சுமிபாய் வாழ்க்கை வரலாறு (ஆங்கில மொழியில்)
  5. சின்னச் சின்ன தகவல்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
  6. 1857: சிப்பாய் கலகமல்ல, சுதந்திரப் போர்!

7. நவீன இந்திய வரலாறு பிபன் சந்திரா தமிழாக்கம் இரா.சிசுபாலன்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya