அவல்பூந்துறை அம்மணீஸ்வரர் கோயில்
அவல்பூந்துறை அம்மணீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் 12 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட திகம்பர சமண கோவில். முற்றிலும் செங்கல் மற்றும் சுன்னாம்பை கொண்டு திராவிட கட்டிட கலையில் கட்டப்பட்ட கோயில். மூலவர் பார்ஸ்வநாதர், இவர் சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர் ஆவார். இவரது சின்னம் 5 அல்லது 7 தலைகள் கொண்ட நாகம் ஆகும். இவரது இடது புறம் யக்ஷ்மி பத்மாவதி அம்மனின் சிலை உள்ளது. பத்மாவதி அம்மன் பார்ஸ்வநாதாரின் காவல் தெய்வம் ஆவார். இவரது கணவரான தர்னேந்திரறும் பாஸ்வநாதாரின் ஆண் காவல் தெய்வம் ஆவார். இக்கோயிலின் மூலவரின் வலது புறம் தருனேந்திரரின் நாகப்பாம்பு வடிவிலான சிலையும், அடுத்து ப்ரம்மா யக்சரின் உருண்டை வடிவிலான சிலையும், மூன்றாவதாக விநாயகர் சிலை ஒன்றும் உள்ளது.கோயிலின் வெளியே மூலவருக்கு நேர் எதிரில் பலிபீடம் உள்ளது. இந்த பலிபீடத்தில் தாமரை வடிவிலான வட்ட வடிவிலான பீடம் ஒன்றும், வட்ட வடிவிலான ஆனால் அடிப்பாகம் சதுரமாக காணப்படுகிறது. இக் கோயிலை அருகிலேயே வசித்து வரும் திகம்பர சமண குடும்பம் 7 தலைமுறைகளாக பூசை செய்தும், பராமரித்தும் வருகின்றனர். கோயில் அமைப்புஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia