ஆனந்த் சந்திர பருவா
ஆனந்த சந்திர பருவா (Ananda Chandra Barua) (1907-1983) அசாமைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும், நாடக ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளரும், பத்திரிகையாளரும், நடிகரும் ஆவார்.[1][2] இவர் அசாமிய எழுத்தறிவு சமூகத்தில் போகுல்போனோர் கோபி (বকুলবনৰ কবি) என்று பிரபலமாக அறியப்படுகிறார்.[3] இவருக்கு பத்மசிறீ, சாகித்திய அகாதமி விருது போன்றவை வழங்கப்பட்டன. விருதுகளும் கௌரவங்களும்பருவா 21 ஏப்ரல் 1970 அன்று இந்திய அரசிடமிருந்து குடிமகன்களின் நான்காவது விருதான பத்மசிறீ ( 1970 ) பெற்றார்.[2] போகுல் போனோர் கபிதா (1976)என்ற கவிதைப் புத்தகத்திற்காக, 1977 இல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.[4] ஜோர்ஹாட்டில் அமைந்துள்ள பகுல்பான் பூங்காவிற்கு பருவாவின் பெயரிடப்பட்டது.[5] அசாமின் பகுல் பான் அறக்கட்டளையால் 'பகுல் போனோர் கபி' ஆனந்த சந்திர பருவாவின் நினைவாக நடனம், இசை, கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் பகுல் பான் விருது வழங்கப்படுகிறது.[6][7] இதனையும் பார்க்கவும்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia