ஆர்யா இராசேந்திரன்
ஆர்யா இராசேந்திரன் (Arya Rajendran) (பிறப்பு: 12 சனவரி 1999) கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மாநகர மேயராக தனது 21 ஆம் அகவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.[1][2] இவர் இந்தியாவிலேயே மிக இள வயதில் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.[3] இவர் திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகள் வார்டில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4] வாழ்க்கைஇவருடைய தந்தை இராசேந்திரன் மின்வினைஞராகவும், தாய் ஸ்ரீலதா ஆயுள் காப்பீட்டுக் கழக முகவராகவும் பணிபுரிகிறார்கள்.[5][6] இவர் திருவனந்தபுரத்திலுள்ள அனைத்துப் புனிதர்கள் கல்லூரியில் இளநிலை கணிதவியல் படித்து வருகிறார்.[7] அரசியல்ஆர்யா இராசேந்திரன் உலக அளவில் குழந்தைகளின் மிகப்பெரிய அமைப்பான பால சங்கத்தின் கேரள மாநிலத்தலைவராக உள்ளார்.[6] இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[5][8][9] இவர் சாலைப் பகுதி இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.[1] 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகள் வார்டில் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிட்டு, எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய சனநாயக முன்னணி வேட்பாளர் ஸ்ரீகலாவைவிட 2,872 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia