ஆர். இந்திரகுமாரி
ஆர். இந்திரகுமாரி (R. Indira Kumari-பிறப்பு 1950-இறப்பு 15 ஏப்ரல் 2024) என்பவர் ஒரு இந்திய அரசியலவாதி மற்றும் முன்னாள் தமிழக அமைச்சராவார். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாட்ராம்பள்ளி தொகுதியில் இருந்து 1991 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அரசில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 முதல் 96 வரை பொறுப்பு வகித்தார். இவர் 2006இல் தி.மு.க வில் இணைந்தார்.[2][3] ஊழல் வழக்கில் சிறை தண்டனை1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராக இந்திராகுமாரி இருந்த போது அவர் மீது 1997-இல் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திராகுமாரிக்கு 29 செப்டம்பர் 2021 அன்று 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. [4][5] இறப்புஇந்திரகுமாரி வயது முதுமையின காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் 15 சனவரி 2024 அன்று சென்னையில் காலமானார்.[6][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia