1967 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவர், அதேஏ ஆண்டு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியில் சேர்ந்து தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்தார். 2001 ஏப்ரலில் ஓய்வு பெறும் வரை அதே கல்லூரியில் பணிபுரிந்தார். தமிழ் ஆசிரியராக வாழ்கையைத் தொடங்கிய இவர் தமிழ்ச்சமுகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தபவராக பரிணமித்தார். சமூக அறிவியல் கூட்டிணைவு அமைப்பின் ஒரு பங்களிப்பாளரும் ஆவார்.
பணிகள்
தென் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், வழக்காறுகள் போன்றவற்றை ஊர்வூராகத் திரிந்து சேகரித்தார். இவருடைய ஆராய்ச்சிப் பணிகள் கள ஆயவை முதன்மையாக கொண்டவையாக இருந்தன.
விருதுகள்
அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 23வது “புதுமைப்பித்தன் நினைவு” விருது எழுத்தாளர் ஆ. சிவசுப்பிரமணியனுக்கு 2018 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.[3] இவர் எழுதிய ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் என்ற நூலுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கப்பட்டது.[4]
படைப்புகள்
நூல்கள்
பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வு (1981)
அடிமை முறையும் தமிழகமும் (1984)
வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும் (1986,2012)
ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (1986, 2009)