இந்தியன் ஏர்லைன்சு விமானம் 171
இந்தியன் ஏர்லைன்சு விமானம் 171 (Indian Airlines Flight 171) 1976 அக்டோபர் 12 அன்று பம்பாய் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கும் போது தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போது இவ்விமானத்தில் இருந்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர். விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்ததால், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது. விபத்துவிமானம் 171 மும்பையிலிருந்து சென்னை நோக்கி வந்த உள்ளூர் விமான சேவையாகும். இப்பறப்பை போயிங் ரக விமானமே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவ்விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், இப்பறப்பை சட் ஏவியேசன் கராவெல் விமானம் மேற்கொண்டது.[1] மும்பையில் ஓடுபாதையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தின் இரண்டாவது இயந்திரம் செயலிழந்தது. இதனை அடுத்து விமானம் திரும்பவும் மும்பை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றது. விமானம் 300 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது. விமானத்தில் இருந்த எவரும் உயிர் தப்பவில்லை.[2][3][4] விபத்தில் இறந்த சிலர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia