இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள்1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து அது பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அதிக மக்கள் தொகைஅதிக மக்கள் தொகையால் இந்தியா பாதிப்படைகிறது. இந்திய மக்கள் தொகை கிட்டத்தட்ட 1.27 பில்லியன் அளவு ஆகும்.[1][2][3] இது மிகவும் அதிகமானதாகும். இந்தியா மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், மக்கள் தொகை அடர்த்தியில் 33வது இடத்தில்தான் உள்ளது . 1970ல் இந்திரா காந்தி இந்திய பிரதமராக இருந்தபோது ஒரு கட்டாய கருத்தடை திட்டத்தை செயல்படுத்தினார். ஆனால் அத்திட்டம் தோல்வியடைந்தது. அதிகாரப்பூர்வமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட ஆண்கள் கட்டாய கருத்தடை செய்ய வேண்டும் என்று இருந்தது, ஆனால் திருமணமாகாத பல இளைஞர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் அறியாமையின் பிடியிலிருந்த ஏழை ஆண்களுக்கும் இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. இதனால் இந்தியாவில் இந்த திட்டம் இன்றும் அனைவரும் குடும்ப கட்டுபாட்டை வெறுப்பதற்கு காரணமாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த திட்டம் பல தசாப்தங்களாக அரசு திட்டங்களைத் முடக்கிக்கொண்டிருந்தது[4] பொருளாதார பிரச்சினைகள்வறுமை![]() இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு (ஏறத்தாழ அமெரிக்காவின் முழு மக்கள் தொகை) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது. மேலும் இந்தியாவில் உலகின் மூன்றில் ஒரு பங்கு ஏழை மக்கள் வாழ்கின்றனர். உயர் வர்க்கம் சமீபத்திய சாதகமான பொருளாதார முன்னேற்றங்களால் பயன் அடைந்தாலும், இந்தியா குறிப்பிடத்தக்க அளவு வறுமையில் உள்ளது. 2005இல் பதிவு செய்யப்பட்ட தரவு அடிப்படையில் உலக வங்கியின் புதிய மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் 456 மில்லியன் மக்கள் புதிய சர்வதேச வறுமை கோட்டிற்கு (ஒரு நாளைக்கு $ 1.25) கீழே வாழ்கின்றனர். உலக வங்கி மேலும் ஒரு மதிப்பீட்டில் உலக ஏழைகளில் 33% இந்தியாவில் தான் வசிக்கிறார்கள் என்று வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள 828 மில்லியன் மக்கள் அல்லது 75.6 சதவீத மக்களின் ஒரு நாள் வருமானம் $2க்கும் கீழ் உள்ளது. உப சகாரா ஆப்பிரிக்காவில்(Sub-Saharan Africa) இந்த எண்ணிக்கை 72.2% ஆகும்.[5][6][7][8] இந்தியாவில் செல்வத்தின் பரவல் சீரற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக மேல்தர 10 சதவீத மக்களின் வருமானம் இந்தியாவின் 33% வருமானம் ஆகும்.[9] குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் இருப்பினும், நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு, அரசாங்கம் குறிப்பிட்ட வறுமை கோட்டிற்கும் (ஒரு நாளைக்கு $0.40) கீழ் உள்ளது. 2004-2005 காலத்தில்[10] உத்தியோகபூர்வமான புள்ளி நிலவரப்படி 27.5% [11] இந்தியர்கள் தேசிய வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகின்றனர். அமைப்பு சாரா துறை தொழில் நிறுவனங்களுக்காக மாநிலத்தால் நடத்தப்பட்டு வரும் தேசிய ஆணையத்தின் (NCEUS) 2007ஆம் ஆண்டு அறிக்கைப்படி இந்தியர்களில் 25% அல்லது 236 மில்லியன் மக்கள், ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் [12] குறைவாக பெற்று வாழ்வதாக கண்டறியப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் "முறைசாரா தொழிலாளர் துறையில் வேலை மற்றும் சமூக பாதுகாப்பு இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்" [13] சுகாதாரம்முறையான சுகாதாரம் இல்லாதது இந்தியாவில் ஒரு பெரிய விவகாரமாகும். 2008ஆம் ஆண்டு யுனிசெப்(UNICEF) நடத்திய ஆய்வின் புள்ளிவிவரங்கள் படி இந்திய மக்கள் தொகையில் வெறும் 31% மக்கள் முறையான சுகாதார வசதிகளை பயன்படுத்துகின்றனர்.[14] இந்தியாவில் ஒவ்வொரு பத்து இறப்புகளில் ஒன்று மோசமான சுகாதாரத்தினால்தான் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருபது மரணங்களில் ஒன்று வயிற்றுப்போக்கு காரணமாக நடக்கிறது.[14] 2006 ஆம் ஆண்டில் சுமார் 450,000 மரணங்கள் வயிற்றுப்போக்கினால் நடந்தது.[14] அதில் 88% ஐந்து வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் ஆகும். மோசமான சுகாதாரத்தினால் விளைவாகும் நோய்கள் குழைந்தகளின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று யுனிசெப்(UNICEF) ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[15] முறையான சுகாதார வசதிகளுக்கு அணுகல் இல்லாத மக்கள் பெரும்பாலும் பொது இடங்களில் அல்லது நதிகளில் கழிவகற்றுகின்றனர். மலத்தின் ஒரு கிராம் 10 மில்லியன் வைரஸ்கள், ஒரு மில்லியன் பாக்டீரியாக்கள்,1000 ஒட்டுண்ணி நீர்க்கட்டிகள் மற்றும் 100 புழு முட்டைகள் கொண்டிருக்கும் சாத்தியம் உடையது.[16] இந்தியாவில் கங்கை நதியில் ஒவ்வொரு நிமிடமும் 1.1 மில்லியன் லிட்டர் கழிவுநீர் அகற்றப்படுகிறது.[16] மனித கழிவு மூலம் அதிக அளவில் மாசுபடும் ஆற்றினால், குறிப்பாக வைரஸ்களால், மிகவும் மற்றும் எளிதில் பாதிக்கப்படையக்கூடிய குழந்தைகளுக்கு காலரா போன்ற நோய்கள் பரவுகிறது மற்றும் இது மரணங்களில் முடிகிறது.[17] போதுமான சுகாதார குறைபாட்டினால் நாட்டிற்கு பொருளாதார இழப்புகள் ஏற்படுகிறது. நீர் மற்றும் சுகாதார திட்டம் (WSP), இந்தியாவில் குறைவான சுகாதாரம் காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை(2010) ஆய்வு செய்த போது போதிய சுகாதாரம் இல்லாததால் 2006 ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதம் அளவிற்கு அதாவது அமெரிக்க $ 53,8 பில்லியன் (2.4 டிரில்லியன் ரூபாய் ) சமமான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டதாக காட்டியது.[18] முறையான சுகாதார முக்கியத்துவத்தை உணர்த்த இந்திய அரசு கிராமப்புறங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் மேம்படுத்தும் முயற்சியில் 1986 ஆம் ஆண்டு மத்திய ஊரக சுகாதார திட்டம் (CRSP) தொடங்கியது. இந்த திட்டம் பின்னர் புதுபிக்கப்பட்டு 1999 ல் மொத்த சுகாதார பிரச்சாரம் (TSC) தொடங்கப்பட்டது. தனிநபர் வீட்டு கழிப்பிடங்கள் (IHHL), பள்ளி சுகாதாரம் மற்றும் சுகாதாரம் கல்வி (SSHE), சமூக சுகாதார வளாகம், அங்கன்வாடி கழிப்பறைகள் போன்ற திட்டங்கள் TSC கீழ் செயல்படுத்தப்பட்டது.[19] டி.எஸ்.சி மூலம், இந்திய அரசு குறைந்த அளவில் நகர்ப்புறப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தொடர்ந்து சுகாதார வசதிகள் வழங்குவதற்கு மாறாக இந்த பகுதிகளில் வசதிகள் தேவையை தூண்டுகிறது. இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட மக்கள் உரிமை எடுத்து அவர்களது சுகாதார வசதிகளை பராமரிப்பார்கள் மற்றும் அதே நேரத்தில், இந்திய அரசு கடன்கள் மற்றும் செலவுகளை குறைக்கும். இது இரண்டு பக்க உத்தியாகும். இது அரசாங்கத்தை மற்ற வளர்ச்சிக்கு வளங்களை ஒதுக்க அனுமதிக்கும்.[20] இதனால், அரசாங்கம் 2017க்கு முன்பு அனைவருக்கும் கழிவறை வசதிகள் அமைக்க நோக்குகிறது.[21] இந்த குறிக்கோளை நிறைவேற்ற, கிராமப்புற மக்கள் தங்கள் சொந்த சுகாதார வசதிகள் அமைக்க முன் வருவதை ஊக்குவிக்க ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கூடுதலாக, அரசாங்கம் அதன் மக்கள் தொடர்பு நுட்பங்கள் மூலம் முறையான சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த குறிக்கோள் நிர்ணயித்துள்ளது. இது ஒரு பெரிய அளவு மக்களை சென்றடைய அச்சு ஊடகங்கள் மூலமாகவும் பெரிய குழு விவாதங்கள் மூலமாகவும் தனிப்பட்ட தொடர்பு மூலம் மற்றும் விளையாட்டுகள் மூலமாகவும் செய்யப்படுகிறது.[22] ![]() ஊழல்ஊழல் இந்தியாவில் பரவலாக உள்ளது. 179 நாடுகளில் இந்தியா சர்வதேச ஊழல் குறியீட்டீன் படி 95 வது இடத்தில் உள்ளது. ஆனால் அதன் மதிப்பு 2002ஆம் ஆண்டில் 2.7இல் இருந்து 2011ஆம் ஆண்டு 3.1க்கு உயர்ந்துள்ளது.[24] வரலாற்று ரீதியாகவே, ஊழல் இந்திய அரசியல் மற்றும் அதிகாரத்துவத்தில், ஒரு பரவலான அம்சமாக இருந்து வருகிறது.[25] இந்தியாவில் ஊழல் இலஞ்சம்,வரி ஏய்ப்பு,பரிமாற்றம் கட்டுப்பாடுகள், கையாடல் போன்ற வடிவத்தில் நடக்கிறது. 2005ஆம் ஆண்டில் வெளிப்படைத்தன்மை இந்தியா (Transparency international India) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் படி 50% மேற்பட்டவர்களுக்கு, லஞ்சம் செலுத்துவது அல்லது ஒரு பொது அலுவலகத்தில் வேலை செய்ய செல்வாக்கை பயன்படுத்துவது போன்றவற்றில் முதல்நிலை அனுபவம் உள்ளது என்று கூறப்படுகிறது.[23] ஊழலால் ஏற்படும் முக்கிய பொருளாதார விளைவுகள் கருவூலத்தின் இழப்பு,ஆரோக்கியமற்ற முதலீட்டு சூழ்நிலை மற்றும் அரசு மானிய சேவைகள் செலவு அதிகரிப்பு ஆகும். ஊழலால் இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பற்றாக்குறை ஏற்படுகிறது.[26][27] TI இந்தியா ஆய்வு படி சுகாதாரம், நீதித்துறை,போலிஸ் மற்றும் கல்வி போன்ற அரசு வழங்கும் 11 அடிப்படை சேவைகளில் 21,068 கோடி ரூபாய்க்கு ஊழல் நடப்பதாக கணக்கிட்டுள்ளது.[23] சுலபமான வணிகம் செய்யும் அடிப்படையில் இந்தியா இன்னும், வளரும் நாடுகளில் கீழே உள்ளது. சீனா மற்றும் பிற சிறிய அளவில் வளர்ந்த ஆசிய நாடுகளுடன் ஒரு தொடக்க ஒப்புதல் பெறுவதற்கு அல்லது திவால் செயலாக்க எடுக்கும் சராசரி நேரத்தை இந்தியாவோடு ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.[28] கல்விமுயற்சிகள்இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949ல் முடிக்கப்பட்டதலிருந்து, கல்வி இந்திய அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் கல்வி அமைச்சராக மவுலானா ஆசாத் இருந்தபோது முதன்மை மட்டத்தில் இலவச கல்வி வழங்க ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. முதன்மை கல்வி இலவசமாக்கப்பட்டது. மேலும் 6-14 வயது குழந்தைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது மற்றும் குழந்தை தொழில் தடை செய்யப்பட்டது. அரசாங்க கல்வி பெற சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது - உதாரணமாக, பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பல ஒத்த முயற்சிகள் எதிரொலித்தன.அதில் சர்வ ஷிக்ஸா அபியன் முன்வைத்த "அனைவருக்கும் கல்வி" மிகப்பெரிய முயற்சி ஆகும். இந்த வரிசையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) 2004 ஆம் ஆண்டில் தேசிய குறைந்தபட்ச பொது திட்டம் (NCMP) மூலம் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%மாக இருந்த தங்களது கல்வி செலவுகளை 6%மாக அதிகரிக்க இலக்கு வைத்தது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் குழந்தைகளின் உரிமையாக 2009ல் விதிக்கப்பட்டது. இந்த முயற்சிகள் இருந்த போதிலும், கல்வியறிவின்மை நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறது. கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி இடையே உள்ள தொடர்புகல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி இடையே நேரடி தொடர்பு உள்ளது. இந்த தொடர்பு தியோடர் டபிள்யூ ஷூல்ட்ஸ் என்பவரால் வழங்கப்பட்டது.[29] இங்கு உழைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.[30] பள்ளி வருமான அளவீடுபள்ளி வருமான அளவீடு அளவிடப்படுகிறது: Y*= படிப்பறிவில்லாத மக்களின் ஊதியம் Y = கல்வி பெற்ற மக்களின் ஊதியம் C = கல்விச்செலவு R = (Y - Y*) / (Y * + C) இதில் Y - Y* லாபமாக இருக்கிறது. இது 1 ஆண்டுக்கு மட்டுமே எனவே Y - Y * / (Y * + C) x இதில் x என்பது ஆண்டுகளின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் Y* வளரும் நாடுகளை விட அதிகமாகும். ஆனால் Y மற்றும் Y * வித்தியாசம் வளரும் நாடுகளில் அதிகமாக உள்ளது. எனவே வளரும் நாடுகளில் பள்ளி வருமான விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. வளரும் நாடுகளில் மனித மூலதன முதலீட்டைத் திரும்ப பெறும் விகிதம் அதிகமாக உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் வருமான விகிதம் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. வருமானத்தை ஒப்பிடுகையில் சிறுவர்களை விட பெண்களுக்கு வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. பையன்களுக்கான திரும்பப் பெறும் விகிதம் அதிகமாக உள்ளது. இந்த கணித சூத்திரம் ப்சசரொபௌலுச்(Psacharopoulos)லால் வழங்கப்பட்டது. அவர் ஒரு கிரேக்க பொருளாதார வல்லுனர்.[31] சிக்கல்கள்பல பள்ளிகள் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் போதிய வசதிகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகள் நன்கு பாதிக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டில் மாவட்ட கல்வி தகவல் அமைப்புபின் (DISE) படி இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளில் 51.5% பள்ளிகளில் மட்டுமே எல்லை சுவர்கள் உள்ளன ,16.65% பள்ளிகளில் கணினிகள் இருக்கின்றன மற்றும் 39% பள்ளிகளில் மின்சாரம் உள்ளது. இதில் 6.47% ஆரம்ப பள்ளிகள் மற்றும் 33.4% மேல் ஆரம்ப பள்ளிகளில் கணினி வசதி உள்ளது. 27.7% ஆரம்ப பள்ளிகளில் மட்டுமே மின்சாரம் உள்ளது.[32] இப்படிப்பட்ட வசதிகள் இல்லாத பள்ளிகளில் படிப்பது தரங்குறைந்த கல்வியையே அளிக்கின்றது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பிற்கு வருவதைத் தவிர்க்கும் விகிதங்கள் அதிகமாக உள்ளது . கட்டாய கல்வி மற்றும் குழந்தை தொழிலாளர் தடை மீதான அரசாங்கத்தின் ஆணையை மீறி பல குழந்தைகள் இன்னும் வேலை செல்ல வகுப்புகளை இழக்கின்றனர். குழந்தைகள் பள்ளி செல்வதை தவிர்க்கும்போதுகூட அரசாங்கம் தலையிடவில்லை. மேலும், லைப்ரரி ஒப் காங்கிரசின் மத்திய ஆராய்ச்சி பிரிவின் நாடுவாறி ஆய்வுகள் வெளியீடுகளில் 'ஆசிரியர் வராமலிருப்பதும், கற்பித்தல் பணிக்கு தகுதி இல்லாத மாற்று ஆசிரியர்களை அவ்வாசிரியர்கள் போடுவதும் சாதாரணமாக நடக்கிறதென்று' கூறப்பிடப்பட்டுள்ளது.[33] இது தகுதியற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளை அதிகரிக்கிறது. தற்போது, மாணவர் ஆசிரியர் விகிதம் அதிகமாக 32ஆக உள்ளது.இது 2006 ஆம் ஆண்டின் விகிதத்தை(34) ஒற்றுப்பார்க்கையில் ஒன்றும் பெரிய முன்னேற்றம் அல்ல.[34] பொருளாதார மற்றும் சமூக வேற்றுமைகள் கல்வி அமைப்பின் அடிப்படையை ஆட்டிப்படைக்கின்றன. குடும்ப வருமானத்திற்கு பங்களிக்க வேலை செய்யவேண்டி உள்ளதால், கிராமப்புற குழந்தைகள் குறைவாகவே கல்வி பெற முடிகிறது. 2009 கல்வி ஆண்டு நிலைமை படி, கிராமப்புற மாநிலங்களில் மாணவர்களின் சராசரி வருகை விகிதம் 75% ஆகும். இந்த விகிதம் இடத்துக்கு இடம் கணிசமாக வேறுபடுகிறது என்றாலும்,உத்தர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் தங்கள் பள்ளிகளில் ஒரு எதிர்பாராத கண்கானிப்பு வருகையின் போது 40%க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பில் இல்லை. இதுவே நகர்ப்புற மாநிலங்களில்,பள்ளி வருகையின் போது 90% மாணவர்கள் பள்ளிகளில் இருந்தார்கள்.[35] வன்முறைமத வன்முறைஅரசியலமைப்பு படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.[36] ஆனால் பெரிய அளவிலான வன்முறை சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், வகுப்புவாத பதட்டங்கள் மற்றும் மதம் சார்ந்த அரசியலில் முக்கிய வன்முறையாக மாறிவிட்டன.தொடர்பு இருப்பினும் இந்து மதமும் இந்துத்துவமும் வேறுபட்டவை. இந்து மதம் ஒரு மதம்.ஆனால் இந்துத்துவம் ஒரு அரசியல் சித்தாந்தம் ஆகும். இந்துத்துவ இயக்கத்தை பெரும்பாலான இந்துக்கள் பெரும்பான்மை ஆதரிக்கவில்லை. சில பொறுமையான அல்லது "மதச்சார்பற்ற" இந்துக்கள் இந்துத்துவ இயக்கத்தின் ஆதரவாளர்களை விவரிக்க "இந்து மதம் தலிபான்" என்ற வாக்கியத்தை பயன்படுத்துவார்கள்.[37] புகுஊக(Fukuoka) ஆசிய கலாச்சாரம் பரிசு பெற்ற இந்திய சமூகவியல் மற்றும் கலாச்சார மற்றும் அரசியல் விமர்சகர் ஆஷிஸ் நந்தி "இந்துத்துவா இந்து மதம் இறுதியில் இருக்கும்." வாதிட்டார்.[38] ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மார்ச் 1990பதிலிருந்து 250,000 முதல் 300,000 பண்டிதர்கள் இந்திய பிரிவினைக்கு பிறகு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியே குடிபெயர்ந்தனர்.[39] மதம் காரணமாக காஷ்மீரில் இருக்கும் காஷ்மீரி பண்டிட்கள் விகிதம் சில மதிப்பீடுகளின்படி 1947 இல் 15% இருந்து 0.1% குறைந்துள்ளது.[40] பல காஷ்மீரி பண்டிட்கள் வந்தமா(Wandhama) படுகொலை மற்றும் 2000 அமர்நாத் யாத்திரை படுகொலை போன்ற சம்பவங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.[41][42][43][44][45] சமீபத்திய ஆண்டுகளில் இந்து மதம் தேசியவாதிகள் இந்தியாவில் இருக்கும் கிரிஸ்துவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள் கூர்மையாக அதிகரித்து வருகிறது.[46] தேவாலயங்களில் கலவரம் நடத்துவது,கிரிஸ்துவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்படுவது,அச்சுறுத்தும் இலக்கிய விநியோகம், விவிலியத்தை எரிப்பது,அருட்சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்வது, கிரிஸ்துவர் குருக்கள் கொலை செய்யப்படுவது மற்றும் கிரிஸ்துவர் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்லறைகள் சேதப்படுத்துவது இந்த வன்முறை நடவைக்களில் அடங்கும்[47] சங் பரிவார் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் வன்முறை மிஷினரிகள் மேற்கொள்ளப்பட்ட "கட்டாயமாக மாற்றும்" நடவடிக்கைகளுக்கு எதிரான "தன்னிச்சையான கோபம்" வெளிப்பாடு ஆகும்.[48][49] இது "அபத்தமானது" என்று அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டது. 1964 மற்றும் 1996 க்கு இடையில் கிரிஸ்துவர்களுக்கு எதிராக முப்பத்தி எட்டு வன்முறை சம்பவங்கள் நடத்தப்பட்டதாக தகவல் உள்ளது.[50] 1997ல் இது போன்று இருபத்தி நான்கு சம்பவங்கள் நடந்தது. 2007 மற்றும் 2008 ல் ஒரிசாவில் பதட்டங்கள் அதிகரித்தன. முதலாவதாக.இந்துக்களால் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் நிலத்தில் கிறுஸ்துவர்கள் ஒரு பந்தல் போட்டது. இரண்டாவதாக ஜென்மாஷ்டமி பூஜையை பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு இந்து குரு மற்றும் அவரது நான்கு சீடர்கள் தூண்டுதல் இல்லாமல் கொலை செய்யப்பட்டது இதை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில்[51] 150 ஆண்டு பழமையான தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மற்றும் கர்நாடகாவில் தாக்குதல்கள் நடந்தன.[52] பயங்கரவாதம்நீண்ட கால பயங்கரவாத நடவடிக்கைகள் இன்றும் ஜம்மு காஷ்மீர், மத்திய இந்தியா (நக்சலிசம்) மற்றும் ஏழு சகோதரி மாநிலங்கள் (சுதந்திரம் மற்றும் சுயாட்சி இயக்கங்கள்) ஆகிய பகுதிகளில் உள்ளன. கடந்த காலத்தில் பஞ்சாப் கிளர்ச்சி, பஞ்சாப் மற்றும் தேசிய தலைநகர் தில்லி (தில்லி தொடர் குண்டு வெடிப்பு,சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில்) ஆகிய இரண்டு மாநிலங்களிலுமே போராளி நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. 2006 ஆம் ஆண்டின்படி நாட்டின் 608 மாவட்டங்களில் குறைந்தது 232 மாவட்டங்களாவது, பல்வேறு கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் மூலம், மாறுபட்ட தாக்குதலுக்கு ஆளாகப்பட்டிருக்கின்றன.[53] நக்சலிசம்![]() இந்திய கம்யூனிச இயக்கத்திலிருந்து, சீன-சோவியத் பிரிவினால் வந்த ஒரு கம்யூனிச கூட்டத்திற்கு வழங்கப்படும் முறைசாரா பெயர் தான் நக்சலிசம். சித்தாந்தரீதியாக, பல்வேறு வகைகளில் அவர்கள் மாவோயிசத்தை ஒத்தவர்களாவர். ஆரம்பத்தில் இயக்கத்தின் மையமாக மேற்கு வங்கம் இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) போன்ற நிலத்தடி குழுக்களின் நடவடிக்கைகள் மூலம் கிராமப்புற மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகளில் குறிப்பாக சட்டீஸ்கர் மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் நக்சலிசம் பரவியிருக்கிறது.[54] சிபிஐ (மாவோயிஸ்ட்) மற்றும் சில நக்சல் பிரிவுகளை இந்திய அரசு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநில அரசாங்கங்கள், பயங்கரவாத குழுக்களாக கருதுகின்றன.[55] ஜாதி தொடர்பான வன்முறைகேர்லங்கி படுகொலை போன்ற தலித்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தலித் மக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்ற பல ஆர்பாட்டங்களும் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.[56] எம்ஐடி அமைப்புகள் விஞ்ஞானியான முனைவர் வி ஏ ஷிவா அய்யாதுரை போன்ற நிபுணர்கள் ஜாதி தொடர்பான வன்முறை இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளைத் தடுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பிற்போக்கு சமூக அமைப்பு நிலவும் போது முன்னேற்றம் கடினமாக இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றனர்.[57] "சமூக அல்லது கல்வியில் பின்தங்கியவர்களை அடையாளம்" [58] காண 1979 ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் நிறுவப்பட்டது. மேலும் சாதி பாகுபாட்டினை நிவர்த்தி செய்யவும், ஒதுக்கீடுகள் தொடர்பான கேள்விகளை கருத்தில் எடுத்துக்கொள்ளவும் இந்த கமிஷன் நிறுவப்பட்டது. வி.பி. சிங் ஆட்சியில் 1989 ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த முயன்ற போது, பெ இருந்த அர்ஜுன் சிங் கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய போது அவர் சாதி அரசியல் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டார்.ரும் போராட்டங்கள் நாட்டில் நடைபெற்றன. அரசியல்வாதிகள் முற்றிலும் தேர்தல் நோக்கங்களுக்காக சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு கொடுக்க முயற்சித்தனர் என்று பலர் கூறினர். மகாராஷ்டிர காங்கிரஸ், அதன் அரசியல் வெற்றிக்கு ஓ.பி.சி. ஆதரவை நீண்ட காலம் சார்ந்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி தங்கள் கட்சி ஒரு உயர் ஜாதி கட்சி அல்ல என்பதை நிரூபிக்க அவர்களின் தலித் மற்றும் ஓ.பி.சி. தலைவர்களை பெரிதாக வெளிப்படுத்தியது. முன்னாள் பா.ஜ.க தலைவர் பங்காரு லட்சுமண்(2001-2002) ஒரு தலித் ஆவார். ஓ.பி.சி. சாதியை சேர்ந்த முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சன்னியாசினி உமா பாரதி முன்னாள் பிஜேபி தலைவர் ஆவார். 2006 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் அமைச்சராக குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia