இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 (3)இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 (3), இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370-ஐ பொது அறிவிப்பின் மூலம், குறிப்பிட்ட நாளிலிருந்து நீக்குவதற்கும், அதில் மாற்றங்கள் செய்வதற்கும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது. .[1] சட்டப்பிரிவு 370- குறித்து, குடியரசுத் தலைவர் பொது அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னர் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 (2) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமன்றத்தின்[2] ஒப்புதலை அவசியமாக பெற்றிருக்க வேண்டும்.[3] குறிப்பு:சனவரி 1957-இல் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் நிறுவப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமன்றம் 26 சனவரி 1957 அன்று கலைக்கப்பட்டது. [4][5]எனவே ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமன்றத்தின் அதிகாரங்கள் தானாகவே ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு கிடைத்துவிடுகிறது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia