இந்திய வெள்ளி சுற்றுகலன் திட்டம்
இந்திய வெள்ளி சுற்றுகலன் திட்டம் என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெள்ளிக் கோளின் சுற்று வட்டப்பாதையை ஆய்வு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.[4][5][6] இதற்குப் போதுமான நிதியுதவி கிடைத்தால் 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு இது விண்ணில் ஏவப்படும்.[7] இறுதிகட்டமைப்பைப் பொறுத்து இதன் தாங்குசுமை 175 கிலோகிராம் [1] மற்றும் ஆற்றல் 500 வாட்டு (அலகு) ஆகும். வெள்ளி (கோளினைச்) சுற்றியுள்ள தொடக்க நீள்வட்டப் பாதையின் சுற்றுப் பாதையானது 500 கிலோமீட்டர் அண்மை வட்டணைப்புள்ளிகளையும் , 60,000 கிலோமீட்டர் கவர்ச்சி மையச் சேவையையும் கொண்டுள்ளது.[8] திட்டத்தின் தற்போதைய நிலைமைசந்திராயன் மற்றும் செவ்வாய் சுற்றுகலன் திட்டம் போன்றவ்ற்றின் வெற்றியானது செவ்வாய் மற்றும் வெள்ளி (கோள்) போன்ற கோள்களில் எதிர்கால விண்வெளி பயணங்கள் பற்றிய சாத்தியக்கூறுகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆய்வு செய்து வருகிறது. இந்திய அரசின் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான நிதியறிக்கையில் வானியல் துறைக்கான நிதி ஒதுக்கீடானது 23 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இந்த நிதி ஒதுக்கீட்டில் செவ்வாய் சுற்றுகலன் திட்டம் மற்றும் இந்திய வெள்ளி சுற்றுகலன் திட்டம் ஆகியவை அடங்கும்.[9] மேலும் காண்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia