இந்திரா என் செல்வம்
இந்திரா என் செல்வம் 1962 ஆம் ஆண்டு சி. பத்மநாபன் இயக்கத்தில், எஸ். சவுண்டப்பன் மற்றும் சி. சென்ன கேசவன் தயாரிப்பில், விருதை ராமசாமி திரைக்கதை, வசனத்தில், சி. என். பாண்டுரங்கன் மற்றும் கச். ஆர். பத்மநாப சாஸ்திரி இசையில், பேபி சுமங்களா, பண்டரிபாய், எம். ஆர். ராதா, எஸ். ஏ. அசோகன் மற்றும் நாகேஷ் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்[1][2][3][4][5][6]. கதைச்சுருக்கம்இந்திரா (பேபி சுமங்களா) பிறந்த உடன் அவளின் தாய் இறக்கிறாள். பிரசவம் பார்த்த செவிலித்தாயான சுசிலா (பண்டரிபாய்) இந்திராவைத் தன் குழந்தையாக வளர்க்க எண்ணுகிறாள். மருத்துவர் கருணாமூர்த்தியால் (எம். ஆர். ராதா) பாதிக்கப்படும் சுசிலா வேறு ஊருக்குச் செல்கிறாள். அங்குள்ள மருத்துவமனையில் வேலைக்குச் சேர்கிறாள். இந்திராவை அங்குள்ள பள்ளியில் சேர்த்து விடுதியில் தங்க வைக்கிறாள். ஆதரவற்ற அனாதை போல் விடுதியில் தங்கி இருக்கும் இந்திராவிற்குத் தன் தந்தை யாரென்று தெரியாது. இதனால் விரக்தியடையும் குழந்தை இந்திரா தன் மனதிலுள்ளவற்றை ஒரு கடிதமாக எழுதி கடவுளுக்கு அனுப்புகிறாள். ஆச்சர்யப்படும் விதமாக அவளுக்கு பொம்மை ஒன்று பரிசாகக் கிடைக்கிறது. அதை தன் நண்பர்களிடம் காட்டி மகிழ்கிறாள். கருணாமூர்த்தி, சுசிலா பணிபுரியும் இடத்தைக் கண்டறிந்து அவளுக்கு இடையூறு செய்கிறான். சுசிலா தன் காதலரான மருத்துவர் சேகர் (எஸ். ஏ. அசோகன்) உதவியால் அவனிடமிருந்து தப்பிக்கிறாள். சேகர்-சுசிலா இருவரும் திருமணம் செய்கிறார்கள். இந்திராவைத் தங்கள் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறார்கள். நடிகர்கள்
படக்குழு
இசைபடத்தின் இசையமைப்பாளர் சி. என். பாண்டுரங்கன் மற்றும் கச். ஆர். பத்மநாப சாஸ்திரி. பாடலாசிரியர்கள் சுரதா, தமிழழகன், வ.சு.ரா., கோவை குமரதேவன் மற்றும் வில்லிபுத்தன்[8].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia