இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு (Irandam Ulagaporin Kadaisi Gundu) என்பது 2019 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை புதுமுக இயக்குநர் அதியன் ஆதிரை எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை பா. ரஞ்சித் தனது நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தார். இக்கதை ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு புனைவின் வழியே எழுதப்பட்டதாகும். கிசோர் குமார் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். "கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" என்ற இசைக்குழுவில் ஒருவரான டென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[1] [2][3] 6 டிசம்பர் 2019 இல் இத்திரைப்படம் வெளிவந்தது. விமர்சகர்களின் பரவலான பாராட்டினைப் பெற்றது. நடிகர்கள்
தயாரிப்புஇயக்குநர் பா. ரஞ்சித் அவர்களின் அட்டக்கத்தி திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்திருந்தார், அது போல ஆனந்தி பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர்கள் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக மீண்டும் இத்திரைப்படத்தில் இணைந்தனர்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia