இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் கி.பி. 705 முதல் 745 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த முத்தரைய அரச குலத்தைச் சேர்ந்த அரசர் ஆவார்.[1] இவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்றும் அறியப்படுகிறார். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்புகளை ஆண்டார்.[2][3]நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் இவர் கலந்து கொண்டார்.[4] 1996-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, திருச்சி நகரில் இவரது சிலையை நிறுவினார்.[5] பிறகு 2002-ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது[6].
வாழ்க்கை
இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் கி. பி. 675-ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் பிறந்தார்.[7] இவரது தந்தை மாறன் பரமேசுவரன் என்கிற இளங்கோவதிராயர். கி. பி. 705-ஆம் ஆண்டில் தனது தந்தையின் பின் அரியணை ஏறினார். நந்திவர்ம பல்லவனுடன் சேர்ந்து பாண்டிய, சேர படைகளை எதிர்த்துப் பன்னிரண்டு போர்களில் போரிட்டுள்ளார்.[8]நாலடியார் நூலில் இவரது மரபு வழி குறிப்பிடப்படுகிறது.[9][10] இவர் தமிழ்ப் புலவர்கள் பலரை ஆதரித்துத் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைப் புகழ்ந்து பாச்சில் வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் காண்கின்றன.[11]
↑ஜே.எம்.சோமசுந்தரம் பிள்ளை, ed. (1962). சோழர் கோயிற் பணிகள். மெட்ராஸ் ஜீவன் பதிப்பகம். p. 18. செந்தலேக் கல்வெட்டால் முத்தரையர் என்ற குறுநில மன்னர் தஞ்சாவூர் புதுக்கோட்டை திருச்சி ஆகிய நிலப் பரப்பை ஆண்டு வந்த செய்தி புலனுறுகின்றது.{{cite book}}: no-break space character in |editor1-last= at position 19 (help); no-break space character in |quote= at position 103 (help)
↑கே.கே. பிள்ளை, ed. (2000). தமிழக வரலாறு மக்களும் பண்பாடும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். p. 212. குறுநில மன்னருள் தலைசிறந்து விளங்கியூவர்கள் முத்தரையர்கள். முத்தரையருள் முதன்முதல் கல்வெட்டுகளில் நாம் அறிந்து கொள்ளும் குறுநில மன்னன் பெரும்பிடுகு முத்தரையன் என் பான் ஆவான்{{cite book}}: no-break space character in |quote= at position 8 (help)
↑N. Subrahmanian. Social and cultural history of Tamilnad, Volume 1. Ennes, 1993 - History. p. 66.
மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார். 296
↑டாக்டர். மா. இராசமாணிக்கனார், ed. (1944). பல்லவர் வரலாறு. சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம்
சென்னை-18. p. 307. முத்தரையரும் தமிழும் (கி.பி. 700-800)
தஞ்சையை ஆண்ட முத்தரையர்க்குத் தமிழ்ப்பற்று மிக்கிருந்தது. அவருள் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இருந்தவன் பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்பவன் இவன் புலவர் பலரை ஆதரித்தவன்; இவனைப் புகழ்ந்து (1) பாச்சில் வேள் நம்பன், (2) ஆசாரியர் அநிருத்தர், (3) கோட்டாற்று இளம்பெருமானார், (4) குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் காண்கின்றன. அவற்றால் இம்மன்னன் அழுந்தியூர், மனலூர், கொடும்பாளுர், காரை, கண்ணனூர், அண்ணல்வாயில் என்ற இடங்களில் நடந்த போர்களில் வெற்றி பெற்றவன் என்பது தெரிகிறது. இனி, ஒவ்வொரு புல்வரையும் அவர் பாடிய பாக்களையும் பற்றிக் காண்போம்.{{cite book}}: line feed character in |publisher= at position 14 (help); line feed character in |quote= at position 38 (help)
↑நடன. காசி நாதன் எம். ஏ, ed. (1981). களப்பிரர். தமிழ் நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை. p. 27. சுவரன் மாறன் பல போர் புரிந்து பல ஊர்களை வென்றி ருக்கிறான். கொடும்பாளுர், மனலூர், திங்களுர், காந்தளூர், அழுந்தியூர், காரை, மறங்கூர், அண்ணல்வாயில், செம்பொன் மாரி, வெண்கோடை, புகழி, கண்ணனூர் ஆகிய இடங்களில் போரிட்டுப் பகைவர்களை வென்றிருக்கிறான்.{{cite book}}: no-break space character in |quote= at position 7 (help)
↑நடன. காசி நாதன் எம். ஏ, ed. (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம் சென்னை. p. 52.