இரத்தினச் சுருக்கம்
இரத்தினச் சுருக்கம் என்பது மகளிர் பற்றிய செய்திகளை இலக்கணமாகச் சொல்லும் தமிழ் நூல். மகளிர் உறுப்புகள், மகளிர் விளையாட்டு, மகளிரோடு இன்பம் காணும் வாழ்க்கை முதலான செய்திகள் பண்டைய தமிழ் மக்களால் எவ்வாறெல்லாம் சொல்லப்பட்டன என்பதை இந்த இலக்கணம் தொகுத்துக் காட்டுகிறது. இதன் காலம் 16-ஆம் நூற்றாண்டு ஆகும். இந்த நூலின் ஆசிரியரான புகழேந்திப் புலவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நளவெண்பா படைத்த புகழேந்திப் புலவர், ஒட்டக்கூத்தரோடு வாதிட்டுப் புறத்திரட்டுப் பாடல்கள் பாடிய புகழேந்திப் புலவர், அம்மானைப் பாடல்களை இயற்றிய 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழேந்திப் புலவர் ஆகியோருக்கெல்லாம் காலத்தால் பிற்பட்டவர். உவமான சங்கிரகம்
இந்த நூலின் முதல் பதிப்பில் (1874) 28 பாடல்கள் இருந்தன. கால-ரத்நாகரம் வெளியிட்ட ஐந்தாம் பதிப்பில் 71 பாடல்கள் உள்ளன. முதல் மூன்று பாடல்கள் கட்டளைக்கலித்துறை யாப்பிலும், அடுத்து 30-வரை உள்ள பாடல்கள் வெண்பா யாப்பிலும், அடுத்து வரும் பாடல்கள் முந்தைய இரண்டோடு விருத்த யாப்பும் விரவிய நிலையிலும் நூல் அமைந்துள்ளது. நூலின் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன. நூலின் இறுதியும் முதலும் மண்டலிக்கவில்லை. எனவே மேலும் சில பாடல்கள் காணாமல் போயின எனத் தெரிகிறது. மகளிரின் விளையாட்டுக்கு உரியனவாக மலர், வாவி, ஊசல், செய்குன்று, அமுதபானம், கிளி, பூவை, பந்து, கழங்கு, அன்னம், மயில், முல்லைப்பந்தல் ஆகியவை இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன (29) முத்து பிறக்கும் இடம் என்று இந்த நூல் தொகுத்துக் காட்டும் 20 பொருள்கள்:
இந்த முத்தங்களை விட மகளிர் தரும் முத்தம் மேலானது என்று புலவர் பாடுவர். (35) மகளிரின் 7 பருவம் எப்படிப்பட்டது என்னும் விளக்கம் சிறப்பாக உள்ளது.
கருவிநூல்
|
Portal di Ensiklopedia Dunia