இராஜன் சோமசுந்தரம்
இராலீ ராஜன் என்று நன்கு அறியப்பட்ட இராஜன் சோமசுந்தரம் (Rajan Somasundaram) , ராலீயை தளமாகக் கொண்ட இசையமைப்பாளரும், முரசுக் கலைஞரும், வயலின் கலைஞரும் மற்றும் இசைத் தயாரிப்பாளரும் ஆவார்.[1]தர்ஹாம் சிம்பொனி மற்றும் முக்கிய சர்வதேச இசைக்கலைஞர்களுடன் இணைந்து தமிழ்ச் சங்க காலக் கவிதைகள் குறித்த முதல் இசைத் தொகுப்பை உருவாக்கியதற்காக இவர் அறியப்படுகிறார். இந்த இசைத் தொகுப்பு ஜூலை 2020 இல் ‘சர்வதேச இசைத் தொகுப்புகள்’ பிரிவின் கீழ் அமேசானின் Top#10 சிறந்த விற்பனையாளராக மாறியது. இது தி இந்து மியூசிக் மதிப்பாய்“வால் இசை உலகில் ஒரு முக்கிய நிகழ்வு” என்று அழைக்கப்பட்டது.[2] சங்கக் காலக் கவிஞர் கணியன் பூங்குன்றனாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல சர்வதேச இசைக்கலைஞர்களுடன் 10 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் கருப்பொருளைப் பாடினார்.[3] வாழ்க்கைதமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்த ராஜன், சியாமா சாஸ்திரிகள் பிறந்த இடத்தில் தனது 9 வயதில் இருந்து கருநாடக இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். மேலும் இவர் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia