இராம் சுவரூப் சர்மா
இராம் சுவரூப் சர்மா (10 ஜூன் 1958 - 17 மார்ச் 2021) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] அரசியல் பணிஇமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள ஜோகிந்தர்நகரில் சர்மா பிறந்தார். சர்மா பா. ஜ. க. வின் (மண்டி மாவட்டம்) அமைப்புச் செயலாளராக இருந்தார். பின்னர் பாஜகவின் (இமாச்சலப் பிரதேசம்) அமைப்புச் செயலாளராக பதவி உயர்த்தப்பட்டார். இவர் மாநில உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கும் அமைப்பின் துணைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளராக மண்டி தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஸ்ரீமதியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.[2] இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேர்தலில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இவர் 2019இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறப்புசர்மா 17 மார்ச் 2021 அன்று புது தில்லியில் இறந்தார். இவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மேலும் இவரது மரணம் தற்கொலையா என தில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia