இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம்
இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம் என்பது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் இராவல்பிண்டியில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட மைதானமாகும். இது பிர் மெஹர் அலி ஷா பல்கலைக்கழகம், இராவல்பிண்டி கலை மன்றம் என்பவற்றிற்கு அருகில் அமைந்துள்ளது. 20,000 இருக்கைகள் கொண்ட[1] இந்த மைதானத்தில் முதல் சர்வதேசப் போட்டி 1992 ஜனவரி 19 அன்று நடைபெற்றது, அப்போது இலங்கை ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது.[2] 1993 ஆம் ஆண்டில் சிம்பாப்வே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த மைதானம் தனது முதல் தேர்வுப் போட்டியை நடாத்தியது.[3] வரலாறு![]() இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம், பிண்டி கிளப் மைதானத்திற்குப் பதிலாகப் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கமாக 1992 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.[4] இது இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் வடக்கு துடுப்பாட்ட அணிகளின் சொந்த மைதானமாகும்.[4] இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம் கட்டப்படுவதற்கு முன்பு, இராவல்பிண்டி கழகத் துடுப்பாட்ட மைதானம் மார்ச் 1965 இல் நியூசிலாந்திற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி உட்பட,[5] பன்னாட்டுப் போட்டிகளுக்கான மைதானமாகப் பயன்படுத்தப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia