இரா. இளங்குமரன்
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 - சூலை 25, 2021) ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார்.[1] புலவர் இளங்குமரனார் எழுதிய நூல்களை தமிழக அரசு நாட்டுடமையாக்கியுள்ளது.[2] பிறப்புஇளங்குமரானார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1927 சனவரி 30 அன்று பிறந்தார்.[3] அவரின் தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார் ஆவார். 1946 ஏப்ரல் 8-இல் முதல் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர்த் தனியே தமிழ் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக 1951-ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் பாடலியற்றும் திறனும் பெற்றிருந்த இவர் இயற்றிய குண்டலகேசி என்னும் காவியம் 1958-ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது. திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார் . நூல்கள்இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் [4]
இவருடைய நூல்கள் மதுரை பாரதி புத்தக நிலையம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சேமமடு பதிப்பகம் ஆகியவற்றின் வாயிலாக வெளிவந்தன. இளங்குமரனார் நூல்கள் யாவும் இப்பொழுது கோ. இளவழகன் அவர்களின் தமிழ்மண் பதிப்பகம் வழியாக மறுபதிப்பும் செம்பதிப்புமாக வெளிவந்துள்ளன. விருதுகள்
தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள்பல ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும் இவர் விரும்பிச் செய்வது நூலாக்கப் பணிகளேயாகும்.பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார். தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர்,மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர்,தேர்வுக்குழு அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துத்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் அறிஞர் தமிழண்ணல் முயற்சியால் விருந்து பேராசிரியராகப் பணிபுரிந்தார். தமிழ்க்குடிமகன், கா. காளிமுத்து உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் இரா.இளங்குமரனாரைப் போற்றி மதித்தவர்கள். தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும வருகிறார். செந்தமிழ் அந்தணர் இரா இளங்குமரனாரின் மறைவுக்குப் பின்பு அவரது குறளாய முறைத் திருமணங்களை அவரது மாணவர் புலவர்.ச.ந.இளங்குமரன் தொடர்ந்து நடத்தி வருகிறார். தமிழக அரசு இவர்தம் தமிழ்ப்பணியை மதித்துப் பல சிறப்புப் பரிசில்கள், விருதுகளை வழங்கியுள்ளது. மறைவுமுதுமையின் காரணமாக தனது 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள தனது வீட்டில் 2021 சூலை 25 அன்று காலமானார்.[6][7] நூல்கள் நாட்டுடைமை8 டிசம்பர் 2021 அன்று இரா. இளங்குமரனார் நூல்களை நாட்டுடைமையாக்கி தமிழ்நாடு அரசு அறிவித்தது[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்இரா. இளங்குமரனார் தமிழ் வளம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு (40 தொகுதிகள்) |
Portal di Ensiklopedia Dunia