இரா. கோபாலகிருஷ்ணன்
இரா. கோபாலகிருஷ்ணன் (R Gopalakrishnan) (பிறப்பு: அக்டோபர் 5, 1968) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் . இவர் மதுரை தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] கோபாலகிருஷ்ணன் 1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூரில் பிறந்தார். இவர் கல்லூரிக் கல்வியினை மதுரையில் உள்ள யாதவர் கல்லூரியில் பயின்றார். இவரது மனைவி திருமதி. கோ. தீபா ஆவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[2] கோபாலகிருஷ்ணன் 2011 முதல் 2014 வரை மதுரை மாநகராட்சியின் மாநகர துணை தந்தையாக இருந்தார்.[3] இவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களில் ஒருவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia