இரிஞ்சன்
இரிஞ்சன் (Rinchan) என்றும் அழைக்கப்படும் சத்ருதீன் ஷா (Sadruddin Shah) காஷ்மீரின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர் ஆவார். இவர் பொ.ச.1320 முதல் 1323 வரை காஷ்மீரை ஆண்டார். பின்னணிவரலாற்றாசிரியர் ஜோனராஜாவால் பொ.ச.1313 ஆம் ஆண்டில், கர்மசேனனின் தளபதியாக குறிப்பிடப்பட்ட "துல்-கதர்" என்ற பெயருடைய ஒரு படையெடுப்பாளர் தனது குதிரைப்படையுடன் காஷ்மீர் மீது படையெடுத்தார்.[1] காஷ்மீரின் வரலாற்றைக் குறிக்கும் நூலான பஹாரிஸ்தான்-இ-ஷாஹி "சுல்சு" என்ற பெயருடைய அவரை ஒரு துருக்கிய-மங்கோலிய படையெடுப்பாளர் என்று குறிப்பிடுகிறது.[2] காஷ்மீரின் அப்போதைய ஆட்சியாளராக இருந்த சுகதேவன் அவரை அனைத்து மரியாதைகளுடன் வரவேற்றார் என்று ஜோனராஜா குறிப்பிடுகிறார். அவர் மோதலில் இருந்து தப்பிக்க முயன்றார். மேலும் அனைத்துப் பொருட்களுக்கும் புதிய வரிகளை விதித்தார்.[1] இது பிராமணர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டி, சுகதேவனின் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.[1][a] இதைப்பற்றிய கருத்தினை பஹாரிஸ்தான்-இ-ஷாஹி குறிப்பிடவில்லை.- காஷ்மீரிகளைக் கொன்று குவிப்பதும் செல்வத்தைப் பெறுவதும் ஒரே நோக்கமாக இருந்ததென அது கூறுகிறது.[2] சுயசரிதைஆரம்ப கால வாழ்க்கைஇரிஞ்சனின் முன்னோடிகளைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.[1] இவர் திபெத்தில் இருந்து வந்ததாக பஹாரிஸ்தான்-இ-ஷாஹி' கூறுகிறது.[2] இவரை பௌத்த மத நம்பிக்கையின் லடாக்கி பிரபு என்றும் கூறுகிறது. இவரது தந்தையும் பிற உறவினர்களும் கலாமான்ய (அநேகமாக பால்டி) குலத்தின் கைகளில் துரோகமாகக் கொல்லப்பட்டனர்.[1] இரிஞ்சன், பழிவாங்கும் வகையில், அவர்களுடன் சமாதானம் செய்து கொள்வதாகக் நடித்து, அவர்களை ஆற்றங்கரைக்கு விருந்துக்கு அழைத்து குடிக்கச் செய்து, நிராயுதபாணியாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடரியால் அவர்களைக் கொலை செய்தார்.[1] இந்த வெற்றி இருந்தபோதிலும், லடாக்கில் ஏராளமான எதிரிகள் இருந்தனர். மேலும் அவர் வடக்கு காஷ்மீரில் தனது வர்த்தகத்தைத் தேர்ந்தெடுத்தார்.[1] அதிகாரத்திற்கு வருதல்இரிஞ்சன் இலோகரா[2] ஆளுநர் இராம்சந்திரனால் ககனகிரி என்ற இடத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டார். இவர் அதிகாரப் படிநிலையில் ஏற்றம் கண்டார். இராமச்சந்திரனை கட்டுக்குள் வைக்கும் நோக்கத்தில் சுகதேவனும் இதை அனுமதித்தார்.[1] நீண்ட காலத்திற்கு முன்பே, இரிஞ்சன் காஷ்மீரிகளை லடாக்கிற்கு அடிமைகளாக விற்று அபரிமிதமான செல்வத்தைப் பெற்றிருந்தார்.[1] கதேவனுக்கு அரியணை மீது சட்டபூர்வமான உரிமையில்லை என்பதால் சிம்மாசனத்தின் மீது இரிஞ்சன் தனது கண்களை வைத்திருந்தார்.[1] [2] கொள்ளையர்களை விரட்டுவதற்கு ஆயுதமேந்திய குழுக்களை உருவாக்க மக்கள் அனுமதிக்கப்பட்டது இரிஞ்சனுக்கு உதவியது. நகரில் விசுவாசமுள்ள வீரர்களின் குழுவை உருவாக்கினார்.[2] இருப்பினும், இராமச்சந்திரன் இவரது சூழ்ச்சிகளுக்கு ஒரு கடினமான தடையாக இருந்தார். ஆனாலும் இரிஞ்சன் லடாக்கியர்களை கோட்டைக்குள் துணி வியாபாரிகளாக அனுப்பி பதுங்கியிருந்து படுகொலை இராமச்சந்திரனை செய்தார்.[1][2] கோட்டை கைப்பற்றப்பட்டது. அவரது உறவினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இராமச்சந்திரனின் மகள் கோத ராணியை, இரிஞ்சனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். [1] ஜோனராஜாவின் கூற்றுப்படி, இரிஞ்சன் அதிகாரத்திற்கு வருவதை எதிர்க்க யாரும் இல்லை எனத் தெரிகிறது. சுகதேவன் காஷ்மீரை விட்டு வெளியேறினார். இருப்பினும், சுகதேவன் ஒரு போரில் தோற்கடிக்கப்பட்டதாக பஹாரிஸ்தான்-இ-ஷாஹி குறிப்பிடுகிறது.[1] ஆட்சிஜோனராஜாவும் பஹாரிஸ்தான்-இ-ஷாஹியும் இரிஞ்சனை ஒரு கனிவான, நேர்மையான ஆட்சியாளர் என்று பாராட்டுகிறார்கள். சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் புனிதமானதாக இருந்தது. மேலும் இவரது சாமர்த்தியமான வழிகள் காஷ்மீரின் பொற்காலம் மீட்டெடுக்கப்பட்டதாக குடிமக்களை நம்ப வைத்தது. [1] [2] [b] ஷா மிர் பிரதமராக நியமிக்கப்பட்டார். [1] கலை மற்றும் கட்டிடக்கலைஇரிஞ்சன் தனது அரண்மனைக்கு அருகில் ஷாவின் நினைவாக ஒரு கட்டிடத்தைக் கட்டினார். அதற்கு ஒரு சாகிரையும் நியமித்தார்.[2] இவர் 'பேத் பள்ளிவாசலை'யும் கட்டினார் (பெரிய பள்ளிவாசல் ). [2] [c] இரிஞ்சன்போரா என்ற இடத்தில் கோட்டையையும் கட்டினார். [1] இறப்புபொ.ச.1323-இன் குளிர்காலத்தில் இரிஞ்சனுக்கு உடல்நலம் குன்றியது இவர் ஒருபோதும் குணமடையவில்லை. நவம்பர் 25 அன்று காலமானார்.[1] இவரது எச்சங்கள் பேத் பள்ளிவாசலுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளன - 1909 ஆம் ஆண்டில் தொல்பொருள் ஆய்வாளர் ஏ.எச்.பிராங்கே என்பவரால் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 1990 [1] ஆண்டில் காஷ்மீர் அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்டது. இவரது மனைவி கோத ராணி மூலம் இவருக்கு ஐதர் கான் என்ற மகன் பிறந்தார். அவரை இவர் ஷா மிரின் பராமரிப்பில் ஒப்படைத்தார். [1] மிர் பின்னர் இராணியுடன் சேர்ந்து ஐதரை கொன்று ஷா மிர் வம்சத்தை நிறுவினார்.[1] குறிப்புகள்
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia