இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோயில்
இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோயில் (kolhapuri mariamman temple) தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி - திருப்பத்தூர் நெடுஞ்சாலையை ஒட்டி இருமத்தூர் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1] வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] கோயில் அமைப்புஇக்கோயிலில் கொல்லாபுரியம்மன் சன்னதியும், விநாயகர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ்வருடப்பிறப்பு, 1 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. நம்பிக்கைகள்திருட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக இக்கோயிலில் புதுமையான வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலுக்கு அருகில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் இந்த புளியமரத்தின் கிளையில் உயிருடன் உள்ள கோழிகளின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தொங்க விட்டு விடுகிறார்கள். இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.[3] படவரிசை
வெளி இணைப்புகள்விக்கிமேப்பியாவில் கோயில் அமைவிடம் மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia