இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள்
இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள் (BWF World Championships, முன்னதாக IBF World Championships) அல்லது உலக இறகுப்பந்தாட்ட போட்டிகள் உலகின் தலைசிறந்த இறகுபந்தாட்ட வீரர்களாக முடிசூட்ட இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு (பிடபுள்யூஎஃப்) நடத்தும் போட்டிப்பந்தயங்கள் ஆகும். இந்தப் போட்டிகள் 1977இல் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 1983 வரை நடத்தப்பட்டன. 1985ஆம் ஆண்டுமுதல் 2005 வரை இந்தப் போட்டிகள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தன. 2006ஆம் ஆண்டிலிருந்து இது ஆண்டுக்கொருமுறை நடத்தப்பெறும் போட்டிகளாக மாற்றப்பட்டன.[1][2][3]
லீ சாங் வேய் ஊக்கமருந்து உட்கொண்ட புகாரில் 2014 ஆம் ஆண்டு போட்டியில் அவர் வென்ற வெள்ளிப்பதக்கம் திரும்பபெறப்பட்டது. எனவே அது பட்டியலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை