இறுதி இராவுணவு அருட்சாதனம் (ஓவியம்)
இறுதி இராவுணவு அருட்சாதனம் (The Sacrament of the Last Supper) என்பது எசுப்பானியக் கலைஞரான சால்வதோர் தாலீ (1904-1989) வரைந்த ஒரு புகழ்மிக்க ஓவியம் ஆகும். ஒன்பது மாதங்கள் உழைப்புக்குப் பின் உருவான இந்த ஓவியம் 1955இல் நிறைவுற்றது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகராகிய வாஷிங்டனில் அமைந்துள்ள தேசிய கலைக்கூடத்தில் இந்த ஓவியம் 1956இல் வைக்கப்பட்டது. அதுவரையிலும் அந்த கலைக்கூடத்தில் பெரும்பான்மை மக்களால் போற்றப்பட்ட ஓவியமாக இருந்தது பியேர் ஓகுஸ்த் ரெனுவா (Pierre-Auguste Renoir) என்னும் கலைஞரின் படைப்பாகிய "பூவாளி பிடித்த சிறுமி" (A Girl with a Watering Can)[1] என்னும் ஓவியமே. அதன் இடத்தை தாலீயின் ஓவியம் பிடித்துக்கொண்டது. இன்று தேசிய கலைக்கூடத்தில் மக்கள் போற்றும் முதன்மை ஓவியமாக "இறுதி இராவுணவு அருட்சாதனம்" ஓவியம் விளங்குகிறது. புதுக் கலைப்பாணிசால்வதோர் தாலீ அடிமன வெளிப்பாட்டியம் என்னும் புரட்சிக் கலைப்பாணியில் ஓவியங்களை வரைந்தார். அதன்பின் பண்டைச் செவ்விய கிறித்தவ கருத்துருக்களை நவீனத்தோடு அவர் இணைக்கத் தொடங்கினார். அதன் பயனாக, உருவான படைப்புகளுள் சில:
கணித விகிதப் பாணிதாலீ உருவாக்கிய "இறுதி இராவுணவு அருட்சாதனம்" என்னும் ஓவியத்தில் பொன் விகிதம் என்னும் கணித வாய்பாடு செயலாக்கம் பெறுகிறது.[5] தாலீ வரைந்த இந்த ஓவியத்தின் நீளமும் அகலமும் பொன் விகிதத்தின்படி அமைந்துள்ளன. மேலும், இயேசுவும் அவருடைய நண்பர்களும் அமர்ந்திருக்கின்ற உணவு மேசையைச் சூழ்ந்து குவிந்துள்ள அமைப்பு பன்னிருகோணம் (dodecahedron) ஆகும். பன்னிருகோண வடிவத்தின் பண்புகளை விவரித்த பிளேட்டோ என்னும் பண்டைய மெய்யியலார் "வான வெளியில் (பன்னிரு) கிரகத் தொகுப்புகளைச் சூழ்ந்து அணிசெய்ய கடவுளே பயன்படுத்திய வடிவம் அது" என்று கூறியுள்ளார். பன்னிருகோண வடிவும் பொன் விகிதத்தோடு நெருங்கிய தொடர்புடையது. குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற மூன்று பொன் விகித செங்கோண முக்கோணங்கள் பன்னிருகோண வடிவத்தை உருவாக்குகின்றன. விமர்சனங்கள்தாலீ வரைந்த இந்த ஓவியத்தில் குறைகண்டோருள் பிரான்சிசு ஷேஃபர் (Francis Schaeffer), பவுல் டில்லிக் (Paul Tillich) என்னும் இறையியலாரும் அடங்குவர். ஷேஃபர் கூறியது:
பவுல் டில்லிக் என்னும் இறையியலாரும் தாலீயின் ஓவியத்தைக் குறைகூறினார். சமய எழுச்சி என்ற பெயரில் தாலீ தரும் ஓவியம் பொருளற்றதாக, வெறும் குப்பையாகவும் ("simply junk!") உள்ளது என்பது அவரது கருத்து.[6] அப்படத்தில் இருக்கின்ற இயேசு "அமெரிக்காவின் அடிப்பந்தாட்ட வீரர் போல, திடகாத்திரமான உடலோடு காட்டப்பட்டுள்ளார். அது தவறு" என்றார் டில்லிக். இயற்கையை மகிமைப்படுத்தும் இந்த முயற்சி வெறுக்கத்தக்கது என்பது அவரது பார்வை. எதிர் விமர்சனம்மேலே கூறிய இரு இறையியலாரும் தாலீயின் ஓவியத்தைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்று வேறு விமர்சகர்கள் கூறுகின்றனர்.[7] அவர்கள் கருத்துப்படி, தாலீயின் ஓவியத்தை லியொனார்டோ டா வின்சி வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்தை முற்றிலும் ஒத்ததாகக் கருதுவது தவறு. இயேசுவைச் சூழ்ந்து பன்னிரண்டு பேர் அமர்ந்து இருப்பது அத்தோற்றத்தைத் தரக்கூடும். ஆனால் தாலீ தரும் பொருள் அதைவிட ஆழமானது. சால்வதோர் தாலீயின் கத்தோலிக்க சமய நம்பிக்கை வெளிப்படுதல்இந்த ஓவியத்தை தாலீ வரைந்தபோது (1955) அவர் கத்தோலிக்க சமயத்திற்குத் திரும்பிவிட்டிருந்தார். அவருடைய மனமாற்றம் நிகழ்ந்தது 1949இல் ஆகும். அதற்கு முன்னோடியாக அமைந்தது தாலீ எசுப்பானியப் புனிதரான சிலுவையின் புனித யோவான் என்பவருடைய இறையியல் கவிதைகளால் கவரப்பட்டு, கிறித்தவ சமயத்தைச் சார்ந்த பொருள்கள் குறித்து கலையாக்கம் செய்யத்தொடங்கியது ஆகும். வெளிப்படையாகக் கிறித்தவப் பொருள்பற்றி தாலீ 1946இல் வரைந்த முதல் ஓவியம் "புனித வனத்து அந்தோனியார் சோதிக்கப்படுதல்" (The Temptation of St. Anthony). கத்தோலிக்க சமய நம்பிக்கையை வெளிப்படையாகத் தழுவிய காலத்திலிருந்து, தாம் அடிமன வெளிப்பாட்டியத்தின் கூறுகளோடு, செவ்வியம் மற்றும் மறுமலர்ச்சிக் காலக் கலைக்கூறுகளையும் இணைத்துக் கலையாக்கம் செய்ய உறுதிபூண்டார். அறிவியலும் சமயமும் முரணாகாசால்வதோர் தாலீ நவீன கால அறிவியல் முன்னேற்றங்களைத் தம் கலையாக்கத்தில் இணைப்பதில் எப்போதுமே ஆர்வம் காட்டினார். அணுக்கரு இயற்பியல் (nuclear physics) மனித அறிவுக்குக் கொணர்ந்த இயற்கை இரகசியங்களை ஆன்மிக உண்மைகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தினார். எனவே, அவருடைய பார்வையில் சமயமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று முரணானவை அன்று. மெய்யியல் துறை, அறநெறித் துறை, கலைத்துறை, உயிரியல் துறை ஆகியவற்றின் எந்தவொரு கண்டுபிடிப்புமே கடவுள் மறுப்புக்கு இட்டுச்செல்வதில்லை என்பது அவருடைய கருத்து. சிக்மண்ட் பிராய்டின் உளநிலைப் பகுப்பாய்வு, கனவு வெளிப்பாடுகள் போன்றவற்றைக் கைவிடாமலே அவர் கிறித்தவக் கருத்துகளையும் நவீன கலைப்பாணியையும், குறிப்பாக அடிமன வெளிப்பாடுகளையும் இணைக்கின்ற வழியைத் தம் கலைப்படைப்புகளில் கையாண்டார். ஓவியத்தின் விளக்கம்தாலீயின் "இறுதி இராவுணவு அருட்சாதனம்" என்ற ஓவியத்தைத் துல்லியமாக ஆய்ந்தால் பல ஆழ்ந்த சமய உண்மைகளைக் கண்டுகொள்ளலாம்:
நற்கருணையில் கிறிஸ்துவின் உடனிருப்பு ஓவியத்தின் கருப்பொருள் ஆதல்சால்வதோர் தாலீ வரைந்த ஓவியம் லியொனார்டோ டா வின்சி என்னும் பேர்போன கலைஞர் வரைந்த இயேசுவின் இறுதி இராவுணவு ஓவியத்தைப் போன்று, இயேசு தம் சீடர்களோடு அமர்ந்து உணவருந்தியதைக் குறிப்பது அல்ல. மாறாக, தாலீயின் ஓவியம் நற்கருணையில் இயேசு உண்மையாகவே உடனிருக்கிறார் என்னும் உண்மையைக் கலைவடிவில் காட்டுகிறது. இயேசு அப்ப இரச வடிவத்தில் உண்மையாகவே நற்கருணையில் உள்ளார் என்பது கத்தோலிக்கரின் ஆழ்ந்த நம்பிக்கை. அந்த உடனிருப்பின் உட்பொருள் என்னவென்பதை தாலீ கலைவடிவில் வெளிக்கொணர்கிறார். நற்கருணை என்பது ஒரு அருட்சாதனம். அருட்சாதனம் என்றால், "புலனாகா எதார்த்தத்தைப் புலனாக்கும் அடையாளம்" என்று பொருள். தாலீயின் ஓவியத்தில் பீடத்தைக் குறிக்கும் மேசையின்மீது அப்பமும் இரசமும் உள்ளன. அவற்றின்முன்னே புலனாகா விதத்தில் (ஒளிபுகு நிலையில்) இயேசு கிறிஸ்து உள்ளார். அவரே "கடவுளின் அருட்சாதனம்" என்னும் வகையில் தந்தையாம் கடவுளை உலகுக்கு வெளிப்படுத்துகிறார். நற்கருணைக் கொண்டாட்டம் என்று அழைக்கப்படுகின்ற திருப்பலியின்போது என்ன நிகழ்கிறது என்பதை சால்வதோர் தாலீ ஓவியமாகச் சித்தரிக்கிறார். மண்ணகத்தில் நிகழும் நற்கருணை வழிபாடு, விண்ணக எதார்த்தத்தை மண்ணகத்துக்குக் கொணர்கிறது என அவர் ஓவியத்தில் காட்டுகிறார். இயேசு நற்கருணையில் உண்மையாகவே உள்ளார் என்னும்போது இயேசு வெளிப்படுத்துகின்ற தந்தையாம் கடவுளும் அங்குள்ளார். குழுவாக இணைந்து வழிபடுகின்ற திருச்சபை தூய ஆவியின் உடனிருப்புக்குச் சான்றாக உள்ளது. மூவொரு கடவுள் எங்கு உள்ளாரோ அங்கே விண்ணகம் உள்ளது. அது புறக்கண்களுக்குத் தெரிவதில்லை, ஆனால் இறைவேண்டலில் ஈடுபட்டு வழிபடுகின்றோருக்கு அது உள்ளார்ந்த விதத்தில் புலனாகின்றது. இதுவே சால்வதோர் தாலீ வரைந்த "இறுதி இராவுணவு அருட்சாதனம்" என்னும் ஓவியத்தின் உட்பொருள். மேலும் காண்ககுறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia