இலக்கணக் கொத்துஇலக்கணக் கொத்து ஒரு தமிழ் இலக்கண நூல். இது வடமொழி இலக்கண மரபைத் தழுவி எழுதப்பட்டது. பாண்டி நாட்டைச் சேர்ந்த சுவாமிநாத தேசிகர் என்பவர் இந்நூலை இயற்றினார். இவரே அதற்கு உரையும் எழுதியுள்ளார்[1]. சைவ மடாலயங்களில் தமிழிலக்கணப் பயிற்சிக்காகப் பயின்றுவந்த நூல்களில் இதுவும் ஒன்று. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அமைப்பு185 அடிகளைக் கொண்ட நீண்ட பாயிரம் உட்பட இந்நூலில் 131பாடல்கள் உள்ளன. வேற்றுமையியல், வினையியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களாக நூல் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வேற்றுமையியலில் 52 பாடல்களும், வினையியல், ஒழிபியல் ஆகியவற்றில் முறையே 22, 45 பாடல்களும் உள்ளன. 31 அடிகளையுடைய இதன் சிறப்புப் பாயிரம் நேரிசை ஆசிரியப்பாவகையைச் சார்ந்தது[2]. நூற்கொள்கைவடமொழி இலக்கணமும் தமிழ் இலக்கணமும் ஒன்றே என நிறுவ முனையும் இந்நூல் தமிழ் மொழியைத் தாழ்த்தி வடமொழியை உயர்த்திப் பேசுகிறது. இந்நூலின் ஏழாவது நூற்பா, தமிழில் அளவில்லாத நூல்கள் இருந்தாலும் ஒன்றாவது தனித் தமிழில் இல்லை என்றும் ஐந்து எழுத்துக்களை மட்டுமே தனக்கெனக் கொண்ட தமிழ் ஒரு மொழி என்று சொல்வதற்கு அறிஞர்கள் வெட்கப்படுவர் என்றும் கூறுகிறது. அந்நூற்பா வருமாறு:
பதிப்புகள்இலக்கணக் கொத்தை முதன் முதலில் பதிப்பித்தவர் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். இப்பதிப்பு 1866 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் 1973 ஆம் ஆண்டில் தி. வே. கோபாலையர் இன்னொரு பதிப்பை வெளியிட்டார். [5]. குறிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia