இலாவண்யா சுந்தரராமன்
இலாவண்யா சுந்தரராமன் (Lavanya Sundararaman) ஓர் கர்நாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் பூர்ணபிராக்யா ராவிடம் ஆரம்பப் பயிற்சியைப் பெற்றார். மேலும் இவரது இசைக்கலைஞர்களின் குடும்பத்திலிருந்தும் பயிற்சி பெற்றார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்இலாவண்யா காயத்ரி, டாக்டர் ஆர். சுந்தரராமன் இணையருக்குப் பிறந்தார். இவர் பிரபல கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாளின் பேத்தி ஆவார். மிருதங்கம் சக்ரவர்த்தி பால்காட் மணி ஐயரின் பேத்தியும் ஆவார் . இலாவண்யா தனது குழந்தைப் பருவத்தில் தனது பாட்டி டி. கே. பட்டம்மாளிடம் இருந்து இசைப் பாடங்களைப் பெற்றார். டி. கே. பட்டம்மாள், பிரபல பாடகி லலிதா சிவகுமார், இவரது தாயார் காயத்திரி சுந்தரராமன், இவரது அத்தையும் புகழ்பெற்ற பாடகியுமான நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் சீடர் ஆவார்.[1][2] இவர் இராணி மேரிக் கல்லூரி, சென்னையில் இளங்கலையும், முதுகலையும் முடித்து டாக்டர் எம். ஏ. பகீரதியின் வழிகாட்டுதலின் படி இசையில் முனைவர் படிப்பும் படித்து வருகிறார். இசை வாழ்க்கைசுற்றுலாஇலாவண்யா இந்தியாவின் முக்கிய சபாக்களில், குறிப்பாக சென்னையில் ஆண்டுதோறும் டிசம்பர் இசை விழாவின் போது இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இவர் அமெரிக்கா, கனடா, இலங்கை மற்றும் பிற இடங்களிலும் பாடல்கள் பாடி இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இலாவண்யாவின் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்
கொள்ளுப் பாட்டி டி. கே. பட்டம்மாள், பாட்டி லலிதா சிவகுமார், தாத்தா ஐ. சிவகுமார், மற்றும் அத்தை நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோருடன் இணைந்து இசை நிகழ்ச்சி.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்இலாவண்யா பல்வேறு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் தோன்றினார்:
பாடிய பாடல்கள்இலாவண்யா இந்து பக்தி மற்றும் பிற வகை இசை ஆவணப் பாடல்களைப் பாடியுள்ளார்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia