இல்லாமை தத்துவம்
நீலிசம் என்ற சொல், சில நேரங்களில், விவரிப்பதற்காக, நியாயம் இல்லாமை என்ற நிலையுடன் தொடர்பு படுத்தி பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் அளவீடுகள், விதிகள் அல்லது சட்டங்கள் போன்ற எந்தவொன்றின் தேவையும் இல்லை என்று உணரும் ஒருவர் குறிப்பின்றி வாழுதலின் பொதுவான மனநிலையை விவரிக்க பயன்படுத்தபடுகிறது.[2] ஃப்யூச்சரிசம் மற்றும் டீகன்ஸ்ட்ரக்ஷன் போன்ற இயக்கங்கள்,[3] மற்றவர்களால் பல்வேறு சூழல்களில், பல்வேறு நேரங்களில் "நீலிஸ்டிக்" என்ற கருத்துரையைப் பெற்றுள்ளன. பல்வேறு காலகட்டங்களுடனும் நீலீசம் இணைந்துள்ளது: எடுத்துக்காட்டாக, ஜீன் பவுட்ரில்லார்டு மற்றும் பிறர் பின்நவீனத்துவம் என்பதை இல்லாமை தத்துவ காலகட்டம்[4] என்று குறிப்பிடுகின்றனர். மேலும் சில கிறிஸ்தவ இறையியலாளர்கள் மற்றும் சிலர் பின்நவீனத்துவம்[5] மற்றும் நவீனத்துவம்[3] ஆகியவற்றின் பல கூறுகள் இறையியலை மறுப்பதாக தெரிவிக்கின்றனர் மற்றும் அந்த மறுப்பு ஒருவகையான இல்லாமைத் தத்துவ நிலையைக் குறிக்கிறது என்கிறார்கள். வரலாறுபத்தொன்பதாம் நூற்றாண்டுநீலிசம் என்ற சொல் முதன்முதலில், நாவல் எழுத்தாளர் ஐவன் டர்க்னேவ் (1818–1883) என்பவரால் அவருடைய நாவல் ஃபாதர்ஸ் அண்ட் சன்ஸ் ,[6] என்பதில் பயன்படுத்தப்பட்டாலும், அந்த சொல் ஃப்ரைட்ரிக் ஹின்ரிக் ஜக்கோபி (1743–1819) என்பவரால், முதன்முதலாக தத்துவ ரீதியான கருத்துகளில் முன்வைக்கப்பட்டது. கட்டற்ற சிந்தனை[7] என்பதை விளக்க ஜக்கோபி முதன்முதலில் இந்த சொல்லைப் பயன்படுத்தினார், குறிப்பாக இம்மானுவேல் காந்த்தின் "முக்கிய" நிலை தத்துவத்தை ரிடக்டியோ அட் அப்சர்டம் என்பதற்கு கொண்டு செல்ல பயன்படுத்துகிறார், இதன்படி, எல்லா கட்டற்ற சிந்தனைகளும் (தத்துவமே விமர்சனமாக) நீலிசத்தில் முடிவடைகிறது, எனவே அவை தவிர்க்கப்படவும், சில வகையான நம்பிக்கை மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றைக் கொண்டு மாற்றீடு செய்யப்பட வேண்டும். ப்ரெட் டபள்யூ. டேவிஸ் என்பவர், எடுத்துக்காட்டாக, "நீலிசம் என்பதன் முதல் கருத்து, பொதுவாக ஃப்ரைடிரிக் ஜக்கோபி என்பவரால் முன்மொழியப்பட்டது, அவர் ஃபிஷ்டேவின் ஐடியலிசத்தை நீலிசத்திற்கு மாறுவது என்று முதன்முதலில் விமர்சித்தார். ஜக்கோபியைப் பொருத்தவரை, ஃபிஷ்டேவின் உண்மையான நான் என்பது உண்மையில் தன்னுணர்வின் முற்றிய நிலையே, இது கடவுளின் உண்மையான இருப்பை மறுக்கிறது."[8] இதனுடன் தொடர்புடைய கருத்தாக்கமாவது ஃபீடிசம் என்பதாகும். நீலிசம் என்ற சொல் டர்கினெவ் என்ற ரஷ்ய அரசியல் இயக்கத்தினரால் பிரபலமடைய செய்யப்பட்டது, அவர்கள் நீலிசம் இயக்கம் என்று இந்த சொல்லைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள், தங்களை, நீலிஸ்ட்கள் என்று அழைத்துக்கொண்டனர், "அப்போது அது அவர்களின் கண்களுக்கு நல்லதாக தோன்றியதாம்."[9] கியர்கெகார்ட்சோரன் கியர்க்கெகார்டு (1813–1855) என்பவர், நீலிசத்தின் ஆரம்ப வடிவத்தை முன்வைத்தார், அதை அவர் சமநிலைப்படுத்துதல் என்று அழைத்தார்.[10] சமநிலைப்படுத்துதல் என்ற செயல்முறையில், தனிநபர்த் தன்மையை மழுங்கடித்தல் என்பது அடங்கியுள்ளது, இந்த நிலையில் தனிநபர்களின் தனித்தன்மை இல்லாமல் போகிறது மற்றும் அவருடைய வாழ்க்கையில் எதுவும் அர்த்தமுள்ளதாக இருப்பதில்லை என்கிறார்:
கியெர்க்கெகார்டு, வாழ்க்கைத் தத்துவத்தின் ஆலோசகராக இருந்தார், பொதுவாக சமநிலைப்படுத்தலையும், அதனுடைய நீலிச விளைவையும் எதிர்த்து வாதாடினார், ஆனாலும், அவை "அது சமநிலைப்படுத்தலின் காலத்தை உண்மையாக கற்றுத்தரும், ஏனெனில் மக்கள் சமநிலையின் தீர்ப்பைத்தான் எதிர்கொள்ள நிர்பந்திக்கப்படுவார்கள்" என்று நம்பினார்.[11] ஜார்ஜ் கோட்கின் என்பவர், கியெர்க்கெகார்டு, "அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாக நம்பிக்கையைத் தரநிலைப்படுத்தல் மற்றும் சமநிலைப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிரானவர்" என்றும், "பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஒட்டுமொத்த கலாச்சாரத்தில், தனிநபர்களின் எண்ணங்களையும் வேறுபாடுகளையும் மாற்று கருத்துக்கு எதிராக பூஜ்ஜிய நிலைக்கு கொண்டுவருவதை முயற்சித்தார்" என்றும் கூறுகிறார். அவருடைய காலகட்டத்தில், துண்டறிக்கைகளும் (டேனிஷ் கோர்சரென் போன்றவை) மற்றும் சீரழிந்த கிறிஸ்தவமும் தான் சமநிலைப்படுத்தலின் கருவிகளாக இருந்தன, மேலும் அவை 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் "ஈடுபாடற்ற அப்படியே பின் தொடரும் காலகட்டத்தை" உருவாக்குவதில் பங்கெடுத்தன.[12] கியர்க்கெகார்டு, சமநிலைப்படுத்தல் செயல்முறையைத் தாண்டி வரும் நபர்கள் அதைவிட வலுவானவர்களாக இருக்கின்றனர் மற்றும் அவர்கள், "உண்மையான தன்னிலையை அடைவதற்கான" படியில் ஒருபடி சரியாக முன்னேறி இருக்கின்றனர் என்று கூறுகிறார்.[11][13] நாம் சமநிலைப்படுத்தலை கட்டாயம் ஜெயிக்க வேண்டும் என்பதால், ஹூபர் டிரைஃபஸ் மற்றும் ஜேன் ரூபின் ஆகியோர் கியெர்க்கெகார்டின் கருத்துக்களை ஆதரித்தனர், "மிகவும் தீவிரமாக நீலிசம் நிறைந்த காலகட்டத்தில், நாம் நம்முடைய வாழ்க்கைகள் அர்த்தமுள்ளவை என்ற உணர்வை எவ்வாறு அடைய முடியும்".[14] கியெர்க்கெகார்டு முன்வைத்த நீலிசம், நவீனகால வரையறையிலிருந்து வேறுபடுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும், கியெர்க்ககார்டைப் பொறுத்தவரை, சமநிலைப்படுத்தல், என்பது, வாழ்க்கை அதன் பொருள், நோக்கம் அல்லது மதிப்பை இழக்கிறது என்ற பொருளைத் தருகிறது,[12] அதே நேரத்தில் நவீனகால வரையறைகள் கூற்றுப்படி, ஆரம்பத்திலிருந்தே வாழ்க்கைக்கு எந்தவித பொருளும், நோக்கமும், மதிப்பும் இருப்பதில்லை. நீட்சேஜெர்மானிய தத்துவவாதி, ஃப்ரெட்ரிக் நீட்சே என்பவருடன் நீலிசம் எப்போதும் தொடர்புப்படுத்தப்படுகிறது, அவர் நீலிசத்தின் விரிவான ஆய்வுகளையும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பரவலான நிகழ்வையையும் வழங்கினார். இதற்கான குறிப்புகள் தொடர்ந்து நீட்சேவின் எல்லா பணிகளிலும் தோன்றினாலும், அவர் இந்த சொல்லை பல்வேறு வழிகளில் பயன்படுத்தி வந்தார், பல பொருள்கள் மற்றும் நோக்கம் மற்றும் நேர்மறை, எதிர்மறை பாங்குகளிலும் பயன்படுத்தி வந்தார். நீலிசம் விவரிக்கப்படும் ஒரு பொதுவான வழியாவது, "நாம் எதை மதிப்பிட விரும்புகிறோம் (அல்லது மதிப்பிடுவது தேவை) என்பதற்கும் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதற்கும் இடையே உள்ள ஒத்திசையாத தன்மையின் பதட்டமான நிலைமை" என்று அவர் விவரிக்கிறார்.[15] உலகில் இருக்கக்கூடிய அல்லது வெகுகாலமாக இருப்பதாக நம்பப்பட்டு வந்த நோக்கம் அல்லது பொருள் உலகில் இல்லை என்று நாம் அறிந்து கொள்ளும்போது நாம் நம்மை ஒரு சிக்கலில் நுழைத்துக் கொள்கிறோம்.[16] கிறிஸ்தவத்தின் வீழ்ச்சி மற்றும் பொருள் சார்ந்த உலகத்தின் எழுச்சி ஆகியவற்றின் காரணமாக நீலிசம் என்பது நவீனகாலத்தின் ஒரு குணாம்சமாக மாறுகிறது என்றும் நீட்செ குறிப்பிடுகிறார்,[17] ஆனாலும் நீலிசத்தின் எழுச்சி இன்றும் முழுமையடையாததாகவும், இன்னும் ஜெயிக்க வேண்டியதாகவும் இருக்கிறது.[18] நீட்சேவின் கையேடுகளில் (அவரின் மரணத்திற்கு பின் வெளியிடப்பட்டவை) வெளிப்படையாக நீலிசத்தின் சிக்கல் குறித்து குறிக்கப்பட்டிருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல சிக்கல்களுடனும் இணைந்திருப்பதாகவும், அவருடைய வெளியிடப்பட்ட பணிகளில் திரும்ப திரும்ப குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இருக்கிறது. நீட்சே, நீலிசத்தை உலகை வெறுமையாக்குதல் என்றும், மனித வாழ்வின் பொருள், நோக்கம் மற்றும் உண்மை அல்லது அவசியமான மதிப்பு ஆகியவற்றிலிருந்து வெறுமையாக்குவது என்றும் கூறுகிறார். நீட்சேவின் கருத்தியல் தத்துவத்தில் இந்த விளக்கம் காணப்படுகிறது, அல்லது அவருடைய மேற்கோளான ‘அறிவு' எப்போதும் யாரோ ஒருவரின் ஏதோ ஒன்று: அது எப்போதுமே கருத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது, உண்மையாக இருப்பதில்லை என்பதன் அடிப்படையில் இது விளக்கப்படுகிறது.[19] ஆனாலும், உலகை நாம் புரிந்து கொள்வதற்கும் அதற்கு பொருள் தருவதற்கும் பல புரிதல் வழிகள் இருக்கின்றன. புரிந்து கொள்ளுதல் என்பது இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது, உண்மையில் அது நமக்கு தேவை ப்படுகிற ஒன்றாகும். உலகை புரிந்து கொள்வதற்கான ஒரு வழி, அதனுடைய நியாயத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள முயற்சிப்பதாகும், இதன் அடிப்படையிலேயே பெரும்பாலான நபர்கள் உலகைப் புரிந்து கொள்கின்றனர், குறிப்பாக அவர்களின் சொந்த எண்ணங்கள் மற்றும் செயல்களைப் பொறுத்து. நீட்சே வலுவான மற்றும் ஆரோக்கியமான நியாய உணர்வை விவரிக்கிறார், அதாவது ஒரு நபர் அதை தானே கட்டுகிறோம் என்று உணர்ந்திருக்கும் நிலையைக் குறிக்கிறார், வலுவற்ற நியாய உணர்வில் புரிந்து கொள்ளுதலானது புற காரணிகளிலிருந்து எழும். வலிமையின் அடிப்படையின்றி, நியாய உணர்வானது, நமக்கு பொருளை தருகிறது. அது உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் 'கருத்தில் சேர்க்கப்பட்டதாக' இருந்தாலும் அது நாம் வாழ்வை நடத்த உதவுகிறது.[20] இந்த காரணங்களினால்தான், நீட்சே நீலிசத்தை "உண்மையான பொருளற்றநிலை" அல்லது "எதற்கும் பொருளில்லை" என்றவாறு குறிப்பிடுகிறார்[21], மேலும் ஆபத்தானது என்றும் "மிகப்பெரிய ஆபத்து என்றும் கூறுகிறார்"[22]: மக்களின் வாழ்க்கை, ஆபத்துக்களை எதிர்கொள்வது மற்றும் வாழ்க்கையில் சந்திக்கும் கடின சூழல்கள் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான மதிப்பீடாகும் இது. எல்லா வகையான பொருள் அல்லது மதிப்புகளையும் அழிப்பது என்பது, தற்கொலை அல்லது ஒட்டுமொத்த படுகொலைக்கு வழிவகுக்கக்கூடும்.[23] நீட்சே தன்னுடைய பணிகளில், கிறிஸ்தவத்தை முக்கியமான தலைப்புகளில் ஒன்றாக விவரிக்கிறார், அவருடைய கையேடுகளில், முக்கியமாக 'ஐரோப்பிய நீலிசம்' என்ற தலைப்பின் கீழ் நீலிசத்தின் சிக்கல்கள் என்ற சூழலில் விரிவாக எழுதியிருக்கிறார்.[24] கிறிஸ்தவ நியாய உணர்வு தத்துவமானது மக்களுக்கு ஒரு உள்ளார்ந்த நம்பிக்கை, இறைவனிடத்தில் நம்பிக்கை ஆகியவற்றை தருகிறது (உலகில் உள்ள தீமைகளுக்கு காரணம் கூறுகிறது) மற்றும் இலக்கு அறிவுக்கான அடிப்படைகளை விவரிக்கிறது. இந்த கருத்தில், அடிப்படை அறிவு சாத்தியமான உலகை கட்டமைப்பதில், கிறிஸ்தவம் நீலிசம் மற்றும் பொருளற்றத்தன்மைக்கு எதிரான சிறந்த எதிர்பொருளாக இருக்கிறது. ஆனாலும், கிறிஸ்தவ தத்துவத்தில், அடிப்படை உண்மை நிலையானது அதனுடைய சரிசெய்யும் திறனாகும்: உண்மையை நோக்கிய முயற்சியில், கிறிஸ்தவம் மெல்ல மெல்ல ஒரு கட்டுமானமாகவும், தன்னுடைய சொந்த அழிவை நோக்கியும் செல்கிறது என்கிறார். எனவே, நீட்சே, நாம் கிறிஸ்தவ மதத்தை மிகவும் அதிகமாக வளர்த்துவிட்டோம், "நாம் அதிலிருந்து தொலைவில் தங்கியிருந்ததால் அல்ல அதற்கு மிக அருகில் இருந்ததால்" என்கிறார்.[25] இதே போல, கிறிஸ்தவ மதத்தின் சுய அழிப்புதன்மை மற்றொரு வகையான நீலிசத்தைத் தோற்றுவிக்கிறது. ஏனெனில், கிறிஸ்தவ மதம், தன்னைத்தானே ஒரு புரிதல் என்று கூறிக்கொள்ளும் புரிதலாக இருக்கிறது, நீட்சே இந்த மாற்றம் அதனை சந்தேகநிலையைத் தாண்டி கொண்டு செல்கிறது மற்றும் எல்லா பொருட்களின் நம்பகத்தன்மையையும் குலைக்கிறது.[26][27] நீட்சேவின் நீலிசக் கருத்தை, பொருளற்றத் தன்மையின் அடிப்படையில் ஸ்டான்லி ரோஸ் என்பவர் கண்டறிகிறார், இதில் "எல்லாமே அனுமதிக்கப்பட்டது" என்று கூறுகிறார். இவரைப் பொறுத்தவரை, அதிக கருத்தியல் ரீதியான மதிப்புகளின் இழப்பு, உலகின் அடிப்படை உண்மை அல்லது மனித யோசனைகள் எல்லா மனித சிந்தனைகளும் மதிப்பற்றவை என்ற உணர்வு நிலையை உருவாக்குகிறது. இதனால், கொள்கைரீதியை மறுத்தலால் நீலிசம் உருவாகிறது, ஏனெனில் ஒன்றுபோன்ற சிந்தாந்தங்கள் மட்டுமே, நீலிசம் மறைமுகமாக கொண்டிருக்கும் முந்தைய தரநிலைகளைக் கொண்டிருக்கும்.[28] உலகை மதிப்பிடுவதற்கான ஆதாரமாக கிறிஸ்தவம் இல்லாத நிலை நீட்சேவின் பிரபல அபோரிசமான மேட்மேன் இன் தி கே சயின்ஸ் என்பதில் பிரதிபலித்தது.[29] கடவுளின் மரணம், குறிப்பாக "நாம் அவரை கொன்றுவிட்டோம்" என்ற கூற்று, கிறிஸ்தவ தத்துவத்தில் உள்ள சுயம் -அழித்தல் என்பதுடன் ஒத்துபோகிறது: அறிவியலின் முன்னேற்றங்கள் காரணமாக, மனிதன் பரிணாம வளர்ச்சியின் ஒரு தயாரிப்பாக காண்பிக்கப்படுகிறான், பூமியானது எந்தவொரு சிறப்பான இடத்தையும் நட்சத்திரங்களின் மத்தியில் பெறவில்லை மற்றும் வரலாறு நேர்மறையானதாக இல்லை, கடவுளின் கிறிஸ்தவ உருவகம், இதன் பின்னரும் நியாய உணர்வின் அடிப்படையாக இருக்க முடியாது. பொருள் இழப்பிற்கு எதிர்வினையாக செய்யப்படும் அம்மாதிரியான ஒரு எதிர்வினையை, நீட்சே 'செயல்படா நீலிசம்' என்று கூறுகிறார், அதை அவர் ஸ்கோபென்ஹாவர் மோசமானதை நினைக்கும் தத்துவம் என்று குறிப்பிடுகிறர். ஸ்கோபென்ஹவ்ரின் தத்துவமானது, நீட்சேவும் மேற்கத்திய புத்தமதம் என்று குறிப்பிடுகிறார், மேலும், ஒருவரை மனம் மற்றும் ஆசைகளிலிருந்து பிரிப்பதன் மூலம் கஷ்டப்படுவதைக் குறைக்க ஆலோசனை வழங்குகிறது. நீட்சே, இதனை சுயமறுப்பு கொள்கை என்றும் "ஏதுமில்லாத்தனத்திற்கான உந்துதல்" என்றும் குறிப்பிடுகிறார், இதனால் வாழ்க்கை அதிலிருந்தே விலகிவிடுகிறது, ஏனெனில் உலகில் பொருளுடைய எதுவும் இல்லை. உலகின் எல்லா மதிப்புகளிலிருந்து விலகி செல்லுதலே நீலிச பின் தொடர்பாளரின் பண்பாகும், ஆனாலும் இதில் ஒரு நீலிஸ்ட் சமநிலை அற்றவராக தோன்றுகிறார்[30]:
நீலிசத்தின் சிக்கல் தொடர்பாக நீட்சேவின் தொடர்புபடுத்துதல் மிகுந்த சிக்கலான ஒன்றாகும். நீலிசத்தின் சிக்கலானது, மிகவும் ஆழமான தனிநபர் பாதிப்பு என்ற நோக்கில் அவர் அதனை அணுகுகிறார், இதனை அவர், நவீன உலகின் சிக்கலாகவும், தனிநபரின் "உள்ளுணர்வு" தொடர்பானது என்று குறிப்பிடுகிறார்.[31] மேலும், நீலிசத்தின் ஆபத்து மற்றும் அது வழங்கும் சாத்தியங்கள் ஆகியவற்றில் அவர் வலியுறுத்துகிறார். அவருடைய கூற்றான, "நான் புகழ்கிறேன், நீலிசத்தின் வருகையை நான் விமர்சிக்கவில்லை" என்று கூறுகிறார். இதுவே, மிகவும் பெரிய சிக்கல்களில் ஒன்றாக நம்பப்படுகிறது, மனித இனத்தின் மிக ஆழமான சுய பிரதிபலிப்பு இதுவாகும். இந்த சிக்கலிலிருந்து ஒரு மனிதன் வெளிவெருவதோ அல்லது, அந்த சிக்கலை முழுவதும் அறிந்து கொள்வதோ அந்த மனிதனின் திறனைப் பொருத்ததாகும்!"[32] நீட்சேவைப் பொருத்தவரை, ஒரு கலாச்சாரத்திற்கு, உண்மையான அடிப்படை இருந்தால் மட்டுமே, நீலிசம் வெல்லப்படும் என்று கூறுகிறார். விரைவாக வருவதை மட்டுமே அவன் விரும்பினான், எனவே அதனுடைய உண்மையான வெளியேறுதலையும் அவன் விரைவுபடுத்த முடியும்.[17] கிறிஸ்தவ சுய அழிப்பின் காலத்தில், மற்றொரு வகையான நீலிசத்தின் வாய்ப்பு உருவாகக்கூடும் என்றும் கூறுகிறார், அதாவது ஒருவர் எல்லாம் அழிந்த பின்னரும், எல்லா மதிப்பு மற்றும் பொருள் ஆகியவற்றுக்கு பின்னரும், ஒன்றுமில்லாமையின் காரணமாக நிறைவடையாது. இந்த மாற்று, 'செயலில்' உள்ள நீலிசம் புதிதாக எதையும் உருவாக்குவதை அழிக்கும். இந்த வகை நீலிசமானது, "வலிமையின் ஒரு அடையாளம்" என்று நீட்சே குறிப்பிடுகிறார்[33] அதாவது, பழைய நம்பிக்கைகள் மற்றும் புரிதல்கள் ஆகியவற்றை சுத்தமாக அழித்துவிட்டு, ஒருவரின் சொந்த நம்பிக்கைகள் மற்றும் புரிதல்களை உருவாக்குவதற்கான தன்னார்வ அழித்தல் என்று குறிப்பிடுகிறார், இது செயல்படா நிலை நீலிசத்தை விட வேறுபட்டது. தன்னார்வமாக மதிப்புகளை அழித்தல் மற்றும் புதிய பொருளைக் கட்டமைப்பதன் மூலம் நீலிச நிலையை வெல்லுதல், ஆகியவற்றின் காரணமாக இந்த நீலிசத்தை, நீட்சே பிற இடங்களில் குறிப்பிடுவது போன்று 'கட்டற்ற ஆன்மா'[34] அல்லது Übermensch தஸ் ஸ்போக் ஜராதுஸ்ட்ரா மற்றும் தி ஆன்டிகிரைஸ்ட் , ஆகிய புத்தகங்களில் குறிப்பிடப்படும், வலிமையான தனிநபர் என்று குறிப்பிடலாம். இந்த தனிநபர் தன்னுடைய சொந்த மதிப்புகளின் மூலம் வாழ்கிறார் மற்றும் அவர்கள் வாழ்க்கையை கலையாக வாழத் தொடங்கினார். நீட்சேவைப் பற்றி ஹெய்டெக்கரின் புரிதல்நீட்சே முன்வைத்த நீலீச சிக்கலை ஆராய்ந்த பல பின் நவீனத்துவவாதிகள், மார்டின் ஹெய்டிக்கர் முன்வைத்த நீட்சேவின் புரிதலால் ஈர்க்கப்பட்டனர். சமீப காலத்தில்தான், நீட்சேவின் நீலிச கருத்துக்களைப் பற்றிய ஹெய்டிக்கர் பார்வைகளின் தாக்கம் குறைந்துள்ளது.[35] 1930களில், ஹெய்டிக்கர் நீட்சேவின் கருத்துக்களைப் பற்றிய விரிவுரைகளை அளித்து வந்தார்.[36] நீட்சே நீலிசம் என்ற தலைப்புக்கு அளித்த பங்களிப்பு தொடர்பாக முக்கியத்துவம் தந்து பேசினார், நீட்சேவின் தத்துவங்களுக்கு ஹெய்டெக்கரின் விளக்கமானது நீலிசம் என்ற சொல் உருவாவதற்கு வரலாற்று ரீதியாக முக்கியத்துவத்தை தருகிறது. நீட்சே தொடர்பான ஹெய்டெக்கரின் ஆய்வுகள் மற்றும் பயிற்சிகள் வெளிப்படையாக அவருக்கு சொந்தமானதே ஆகும். அவர் நீட்சேவை அப்படியே நீட்சேவாக வழங்க முயற்சி எதையும் செய்யவில்லை. மாறாக, நீட்சேவின் கருத்துக்களை தனது சொந்த தத்துவங்களான, இருத்தல், நேரம் மற்றும் டேசியன் ஆகியவற்றில் பயன்படுத்த முயற்சித்தார்.[37] அவருடைய நீலிசம் என்பது இருத்தலின் வரலாற்றினால் தீர்மானிக்கப்படுகிறது (1944–46)[38] என்ற கொள்கையின்படி, ஹெய்டிக்கர், நீட்சேவின் நீலிசத்தை, மிகப்பெரிய மதிப்புகளின், உண்மைத்தன்மை அற்ற நிலையை வெல்ல பயன்படுத்த முயற்சித்தார். இந்த மதிப்பீடு இழக்கும் தன்மையின் தத்துவமானது, ஹெய்டெக்கரின் கருத்துப்படி, திறனுக்கான மனநிலை என்பதை அடிப்படையாக கொண்டது. திறனுக்கான மன உணர்வு என்பது, மதிப்புகளை மதிப்பிடுதல் போன்ற எல்லா முந்தைய தத்துவங்களுக்கும் அடிப்படையான தத்துவமாகும்.[39] ஆனால் எவ்வாறு மதிப்பீடு இழத்தல் நடைபெறுகிறது மற்றும் இது எப்படி நீலிஸ்டிக் தன்மையாக மாறும்? தத்துவம் தொடர்பான ஹெய்டெக்கரின் முக்கிய விமர்சனங்களில் ஒன்று, குறிப்பாக மெட்டாபிசிக்ஸ் பற்றியது, இருப்பவர் (சியண்டே ) பற்றிய சிந்தனையையும் இருப்பதையும் (சியன் ) வேறுபடுத்திக் காட்டாததே என்பது ஆகும். ஹெய்டெக்கரின் கருத்துப்படி, மேற்கத்திய சிந்தனைகளின் வரலாற்றை, மெட்டாபிசிக்ஸின் வரலாறாகவே காண முடியும். மேலும், மெட்டாபிசிக்ஸ் இருப்பவை பற்றிய சிந்தனை குறித்த கேள்வியை கேட்க மறந்து விட்டதால் (இதை ஹெய்டெக்கர் சியன்ஸ்வெர்ஜெஸ்ஸென்ஹீட் என்று அழைக்கிறார்), அது இருப்பவற்றை அழிப்பதன் வரலாறு ஆக மாறிவிட்டது. இதனால்தான் ஹெய்டெக்கர் மெட்டாபிசிக்ஸை நீலீச தன்மை கொண்டது என்று அழைக்கிறார்.[40] இதன் மூலமாக நீட்சேவின் மெட்டாபிசிக்ஸ் நீலிசத்தை வெல்லாமல், அதை இன்னும் உறுதியாக சொல்வதாகிறது.[41] ஹெய்டெக்கர், அவருடைய நீட்சேவின் விளக்கங்களில், எர்னஸ் ஜங்கர் என்பவரின் தாக்கத்தினால் பேசுகிறார். நீட்சேவைப் பற்றி, ஹெய்டெக்கர் செய்த விரிவுரைகளில், ஜங்கரின் பல கருத்துக்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். எடுத்துக்காட்டாக, ஃப்ரைபெர்க் பல்கலைக்கழக ரெக்டருக்கு நவம்பர் 4, 1945 -இல் எழுதிய ஒரு கடிதத்தில் ஹெய்டக்கர், ஜங்கரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, “கடவுள் இறந்துவிட்டார்” என்ற கருத்தை “திறனடைவதற்கான மனதின் உண்மை” என்று விளக்க முற்படுகிறார். ஹெய்டக்கர், நீட்சே அவருடைய தேர்ட் ரீக் புத்தகத்தில் மிகவும் உயிரியல் அல்லது சமூகவியல் கண்ணோட்டம் கொண்டவர் என்ற கருத்தை ஆதரிக்கும் ஜங்கரின் கருத்தையும் புகழ்கிறார்.[42] ஏராளமான பின் நவீனத்துவ சிந்தனையாளர்கள், நீட்சேவின் ஹெய்டெக்கரின் விளக்கங்களை மிகவும் பாராட்டுகின்றனர். ஜியான்னி வாட்டிமோ என்பவர், ஐரோப்பிய சிந்தனைகளில் ஏற்பட்ட முன் பின் மாறுபாடானது, நீட்சே மற்றும் ஹெய்டெக்கர் ஆகியோருக்கு இடைப்பட்டது என்று கூறுகிறார். 1960களில், நீட்சே கருத்துக்களின், 'மறுபிறப்பு' தோன்றியது, இதற்கு மாசினோ மோன்டினாரி மற்றும் ஜியோர்ஜியோ கோல்லி ஆகியோரின் பணிகளின் தொகுப்பு முக்கிய காரணமாக இருந்தது. நீட்சேவின் தொகுக்கப்பட்ட முழுமையான எழுத்துக்களின் அடிப்படையில், அவர்கள் புதிய மற்றும் பணியைத் தொடங்கினார்கள், இதனால் நீட்சேவின் கருத்துக்கள் விரிவான ஆராய்ச்சிக்கு எளிதாக அணுகக்கூடியதாக கிடைத்தது. வாட்டிமோ, கோல்லி மற்றும் மோன்டினாரி ஆகியோரின் இந்த புதிய பதிப்பை, நீட்சேவைப் பற்றி ஹெய்டெக்கரின் புரிதல்கள் சரியான வடிவத்தை அடைய தொடங்கியுள்ளன என்று குறிப்பிட்டார். சமகால பிரெஞ்சு மற்றும் இத்தாலிய தத்துவவாதிகளைப் போன்று, வாட்டிமோவுக்கு நீட்சேவின் கருத்துக்களை புரிந்து கொள்ள முழுவதுமாக அல்லது ஒரு பகுதியாகவும் ஹெய்டெக்கரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதே நேரத்தில், தொடர்ந்து படிப்பதற்கு ஹெய்டெக்கரின் நோக்கங்கள் சரியானவையே என்று வாட்டிமோ நடுநிலையாக கூறுகிறார்.[43] இந்த முன் பின் செல்லும் இயக்கத்தின் பகுதியாக வாட்டிமோ வெளிப்படுத்த விரும்பும் தத்துவவாதிகளானவர்கள் பிரஞ்சு தத்துவவாதிகளான டெலியூஸ், ஃபோகால்ட் மற்றும் டெர்ரிடா ஆகியோர் ஆவர். இந்த இயக்கத்தைச் சேர்ந்த இத்தாலிய தத்துவவாதிகளானவர்கள் காக்சியாரி, செவிரினோ மற்றும் வாட்டிமோ ஆகியோர் ஆவர்.[44] நீட்சேவின் ஹெய்டெக்கர் விளக்கங்களால் ஈர்க்கப்பட்ட பிற தத்துவவாதிகளானவர்கள், ஹாபர்மாஸ், லயோடார்டு மற்றும் ரோர்டி ஆகியோர் ஆவர்.[45] பின் நவீனத்துவம்பின்நவீனத்துவம் மற்றும் கலாச்சாரத்துக்கு பிந்தைய சிந்தனையானது, மேற்கத்திய கலாச்சாரங்கள் அவர்களின் அடிப்படைகளை அமைத்துள்ள 'உண்மைகளை' கேள்விக்குள்ளாக்குகின்றது: உண்மையான அறிவு மற்றும் பொருள், ஆசிரியத்துவத்தின் 'பரவலாக்கம்' , நேர்மறை அறிவின் சேர்க்கை, வரலாற்றின் போக்கு, மற்றும் மனிதத்தன்மை மற்றும் ஞானம் ஆகியவற்றின் தூய்மை மற்றும் நடைமுறைகள் ஆகியவை இதில் அடங்கும். ஜக்கஸ் டெர்ரிடா, தன்னுடைய கட்டமைப்பு நீக்குதல் கொள்கைக்காக மிகவும் பிரபலமானவர், அது அதிக அளவில் நீலிச தலைப்பில் அறியப்பட்டது, ஆனால் மற்றவர்கள் கூறுவது போன்ற நீலிச இயக்கத்தை அவர் வாதாடவில்லை. ஒரு கட்டுப்படுத்தும் உண்மையிலிருந்து, தனிநபர்களை அல்லது நிறுவனங்களை டெர்ரிடீனின் கட்டமைப்பு நீக்குதலாக இந்த அணுகுமுறையை வாதிடுகிறார்கள். மேலும் கட்டமைப்பு நீக்குதல், வாழ்க்கையை வாழுவதன் பிற வழிகளை திறக்கிறது என்கிறார்கள்.[46] எடுத்துக்காட்டாக, காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக், மேற்கத்திய மேதமைத்தனத்தின் தர்மங்களைத் திறப்பதற்கு, கட்டமைப்பு நீக்குதல் தத்துவத்தைப் பயன்படுத்தினார், மேற்கத்திய தத்துவங்களின் ஆழத்தை அறியவும் அதிலிருந்து மீளவும் அவர் இதனை பயன்படுத்தினார்.[47] 'மற்றவருக்கான பொறுப்பு'[48] என்பதன் அடிப்படையில், டெர்ரிடாவே ஒரு தத்துவத்தை அமைத்தார், ஆனால் நம்முடைய உண்மையை அறியும் திறனை மறுக்கிறார் (அது ஒரு எபிஸ்டெமோலாஜிக்கல் கோரலை நீலீசத்தின் ஆன்டாலாஜிக்கல் கோரலுக்கு எதிராக முன்வைக்கிறது). லியோடார்ட் என்பவர், ஒரு ஒற்றை உண்மை அல்லது முறையில் தங்கி நிற்பதற்கு பதிலாக, தத்துவவாதிகள், அவர்களின் உண்மைகளை ஆண்டு மற்றும் அமைப்புகளின் அடிப்படையில் கதைகள் கூறுவதன் மூலமாக உண்மைப்படுத்துகிறார்கள், இதனை ல்யோடார் பகுதி விளக்கங்கள் என்று குறிப்பிடுகிறார். அவர் பின்னர், பின்தத்துவநிலையை இந்த பாதி விளக்கங்கள் மற்றும் பாதி விளக்கங்களை உண்மைப்படுத்துவது ஆகிய இரண்டையும் மறுப்பது என்று வரையறுக்கிறார். "பாதி விளக்கங்களின் இடத்தில், நாம் மொழி-விளையாட்டுகளை உருவாக்கி, நம்முடைய சொற்களை உண்மைப்படுத்துகிறோம், மாறும் உறவுமுறைகள் மற்றும் மறைக்கப்படக்கூடிய உண்மைகள் ஆகியவற்றை நாம் சார்ந்திருக்கிறோம், இவை எதுவுமே அசல் உண்மையை பேசுவதற்கு தகுதிவாய்ந்தது அல்ல." உண்மையின் நிலைப்புத்தன்மையின்மை என்ற இந்த கருத்து மற்றும் பொருளானது, நீலிசத்தின் திசையை காட்டுகிறது, ஆனாலும் ல்யோடார்டு இரண்டாவதை விவரிக்கவில்லை. பின்நவீனத்துவ கொள்கையாளர் ஜீன் பவுட்ரில்லார்டு நீலிசத்தை பின்நவீனத்துவ பார்வையில் சிமுலாக்ரா அண்ட் சிமுலேஷன் என்பதில் விரிவாக எழுதியுள்ளார். நிஜ உலகின் புரிதல்களை அதன் மீதான மாதிரி தோற்றங்கள் பற்றி அவர் அதிக அளவில் தாக்கங்களை செய்தார். பவுட்ரில்லார்டின் நீலிச விவாதத்தில் பொருளின் பயன்பாடுகள் மிகவும் முக்கியமான பொருளாகும்:
நீலிசத்தின் வடிவங்கள்நீலிசத்துக்கு பல வரையறைகள் உள்ளன, எனவே தனித்தனி தத்துவ நிலைகளைக் கொண்டு விளக்குவதற்காக பயன்படுகிறது. நீதியின் நீலிசம்நீதியின் நீலிசம், தர்மம் சார் நீலிசம் என்றும் அறியப்படுகிறது, இது உயர்நிலை-நீதி காட்சியில், பொருள்சார் உண்மையுடன் இருப்பதாக நீதி என்று எதுவும் இருப்பதில்லை; எனவே ஒரு விஷயத்தை விட சிறந்ததாக வேறு ஒன்றைச் செய்வதற்கு எந்த செயலும் தேவைப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு நீதி நீலிஸ்ட், ஏதேனும் காரணத்துக்காக ஒருவரை கொலை செய்வதும் கூட, உண்மையில் சரி அல்லது தவறு என்று கூற மாட்டார். சில நீலிஸ்ட்கள்[யார்?] நீதி என்று எதுவும் இல்லை என்று வாதிடுவார்கள், ஆனால் ஏதேனும் இருக்கிறதென்றால் மனிதனும், அவனுடைய செயற்கை கட்டுமானமும் மட்டுமே இருக்கிறது, இதிலே எல்லா பொருள்களும் வேறுபட்ட சாத்தியங்களுடான பொருள்களுடன் இருக்கும். எடுத்துக்காட்டாக, யாரேனும் ஒருவர் யாரையாவது கொன்றுவிட்டால், மேற்கூறியவாறு ஒரு நீலீஸ்ட், கொல்வது உண்மையில் தவறான விஷயம் இல்லை என்றும், நம்முடைய நீதிசார் நம்பிக்கைகளில் இருந்துதான் தீமை என்பது வெளிவருகிறது, நீதியானது அடிப்படை இரட்டை நிலைகளின் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது, தீமை என்று கூறப்படுவது நல்லது என்பதை விட எதிர்மறை மதிப்பு தரப்பட்டதாக இருக்கிறது: இதன் விளைவாக ஒரு மனிதனைக் கொல்வது தவறானது, ஏனெனில் அது ஒரு மனிதனை வாழவிடுவதில்லை, இதில் வாழுதல் என்பதற்கு நேர்மறை மதிப்பு தரப்பட்டுள்ளது. இந்த வகையில் ஒரு நீதி சார் நீலீஸ்ட் எல்லா நீதிசார் கோரிக்கைகளும் தவறு என்கிறார். இருத்தல் இல்லாமை தத்துவம்வாழ்க்கைக்கு எந்தவொரு, உள்ளார்ந்த அர்த்தமும் மதிப்பும் இல்லை என்ற நம்பிக்கையே இருத்தல் இல்லாமை தத்துமான இருத்தல் நீலிசம் எனப்படுகிறது. இது, இயற்பியல் ரீதியான தத்துவங்களே நம்முடைய இருப்பின் காரணங்களாக இருக்கின்றன என்ற அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. பேரண்டத்தைப் பொருத்தவரை, எந்தவொரு மனிதனும், அல்லது ஒட்டுமொத்த மனித இனமும் எந்தவித முக்கியத்துவம் இல்லாதது, நோக்கமும் இல்லாதது மற்றும் ஒட்டுமொத்த இருப்பின் அடிப்படையில் மாறக்கூடியது. எளிதாக கூறுவதென்றால், நீலீசத் தன்மையாளர்கள், வாழ்க்கையின் ஒரே நோக்கம் அதை வாழ்வது மட்டுமே என்று நம்புகிறார்கள். தத்துவ அறிவுசார் இல்லாமை தத்துவம்சந்தேகம் கொள்ளுதலின் மிக அறிவுசார் முதிர்ச்சி வடிவம் நீலிசம் ஆகும், இதில் அறிவு முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது.[49] மெட்டாபிசிக்கல் தத்துவ நீலிசம்மெட்டாபிசிக்கல் நீலிசம் என்பது, ஒரு தத்துவ கொள்கையாகும், எந்தவித பொருட்களும் முற்றிலுமாக இல்லாமல் இருக்கக்கூடும் , அதாவது, எந்தவித பொருட்களுமே இல்லாத உலகம் ஒன்று இருக்கக்கூடும் அல்லது அதில் குறைந்தபட்சம் எந்தவொரு உறுதியான பொருட்களும் இல்லாமல் இருக்கக்கூடும். எனவே எல்லா சாத்தியமான உலகிலும், சில பொருட்கள் இருந்தாலும், மாயப் பொருட்களால் மட்டுமே உலகம் ஒன்றும் இருக்கக்கூடும். மெட்டாபிசிக்கல் நீலிசத்தின் உச்ச வடிவமானது, பொதுவாக, இருத்தலே இருப்பதில்லை என்ற நம்பிக்கை என்று வரையறுக்கப்படுகிறது.[50][51] இந்த கூற்றைப் புரிந்து கொள்வதற்கான ஒரு வழி: 'இருத்தல்' என்பதை 'இல்லாமை' என்பதலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது முடியாத காரியம், ஏனெனில் இரண்டுக்குமே எந்தவொரு பண்புகளும் இல்லை, எனவே உண்மை என்பது, உண்மை நிலை என்பது, இரண்டுக்கும் இடையே வேறுபடுத்தி காண உதவும் ஒரு நிலையாகும். ஒருவர் இருத்தலை அதனுடைய மறுப்பிலிருந்து உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றால், இருத்தல் என்பதன் கருத்தே இல்லாமல் ஆகிவிடும்; அல்லது வேறு சொற்களில் கூறுவதென்றால், அது எந்தவொரு அர்த்தம் பொதிந்த வழியிலும் 'இருப்பதில்லை'. இந்த இடத்தில் 'பொருள்' என்பது, உண்மை என்ற நிலையைத் தாண்டி, இருத்தலுக்கு எந்தவித உயர்ந்த நிலையும் இல்லை, அதாவது இது ஒரு தரத்தை வரையறுக்கவும், அதன் தேவையை உணரவும் அவசியமாகிறது, இருத்தல் என்பதற்கு பொருளெதுவும் இல்லை. இந்த நம்பிக்கை, அறிவுசார் நீலிசத்துடன் இணைந்தால், ஒருவரை எல்லாம் ஒன்றிணைந்த நீலிசம் என்ற கொள்கைக்கு இட்டு செல்கிறது, இதில் எதையுமே உண்மை அல்லது நிஜம் என்றும், அம்மாதிரியான மதிப்புகள் இருக்கின்றன என்றும் கூற முடியாது. இம்மாதிரியான நிலையை, சோலிப்பிசம் என்பதில் காணலாம்; ஆனாலும், இந்த பார்வையில் ஒரு சோலாபிஸ்ட் சுயத்தை உறுதிசெய்வார் ஆனால் ஒரு நீலிஸ்ட் அதனை மறுப்பார். இந்த இரண்டு நிலைகளுமே நிஜத்திற்கு புறம்பான நிலைகளாகும்.[சான்று தேவை] ஆனால், இருத்தலும், உண்மையும் எதுவும் இல்லை என்று கூறினாலும், அவை இருத்தலைப் பற்றியும் உண்மையைப் பற்றியும் ஏதேனும் கூற்றைப் பொதுவாக உருவாக்குகின்றன. மீரியோலாஜிக்கல் நீலிசம்மீரியோலாஜிக்கல் நீலிசம் (குழுவாக்கல் நீலிசம்) என்பது முறையான பொருட்கள் எதுவும் இருப்பதில்லை என்ற நிலையை மறுக்கிறது (வெளியில் உள்ள பொருட்கள் மட்டுமின்றி, காலம் சார்ந்து இருக்கும் பொருட்களும் இல்லை என்கிறது, ஆனால் காலம் சார்ந்து இருக்கும் பொருட்களும் எந்தவித தற்காலிக பொருட்களையும் கொண்டிருப்பதில்லை), மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் மட்டும் எந்தவித பகுதிபொருட்களும் இல்லாமல் இருக்கின்றன. மேலும் நாம் காணும் இந்த உலகில் உள்ள எல்லாமே மனிதனுடைய தவறான பார்வையின் காரணமாக ஏற்படும் பொருட்களைச் சேர்ந்ததாக இருக்கின்றன (அதாவது, நாம் தெளிவாக பார்த்தால், குழுவான பொருட்களைக் காண மாட்டோம்). அரசியல் நீலிசம்அரசியல் நீலிசம், என்பது நீலிசத்தின் ஒரு பிரிவாகும், பகுத்தறிவற்ற அல்லது நிரூபிக்கப்படாத கூற்றுக்களை நீலீசத்தின் அடிப்படையில் மறுப்பதாகும், இந்த நிலையில் பெரும்பாலான அடிப்படை சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளை மறுப்பதாகும், அதாவது அரசாங்கம், குடும்பம் அல்லது சட்டம் மற்றும் சட்ட நடைமுறைப்படுத்தலும் கூட மறுத்தலுக்குரியவையே. 19 ஆம் நூற்றாண்டில், ரஷ்யாவில் தோன்றிய நீலிஸ்ட் இயக்கமும் இதே போன்ற தத்துவத்தையே பின்பற்றியது. இருத்தல் பற்றிய நீலிசம்இருத்தல் குறித்த நீலிசம் என்பது நீலிசத்தின் ஒரு கட்டற்ற பிரிவாக, இருத்தலையே மறுப்பதாக உள்ளது. இதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டானது, தத்துவரீதியான விவாதமான ஒன்றுமில்லாததிலிருந்து ஏதோ ஒன்று என்பதாகும். கலாச்சார ரீதியான தோற்றங்கள்தொலைக்காட்சிபோஸ்டன் கல்லூரியில், தத்துவவியலில், பேராசிரியராகவும், தலைவராகவும் உள்ள தாமஸ் ஹிப்ஸ் என்பவர், சீயன்ஃபெல்ட் என்ற நிகழ்ச்சி, தொலைக்காட்சியில் நீலிசத்தின் உருவகம் என்று குறிப்பிடுகிறார். சிட்காம் என்பதன் அடிப்படையானது, "ஒன்றுமில்லாததைப் பற்றிய நிகழ்ச்சி" என்பதாகும். பெரும்பாலான அத்தியாயங்கள், மிகச்சிறிய பொருட்களைப் பற்றியே இருந்தன. இந்த பார்வையானது, சீயென்ஃபெல்ட் டில் காண்பிக்கப்பட்டது, வாழ்க்கை இலக்கற்றது என்றும், இது மோசமான உணர்வை தருகிறது, இதனை இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருபொருள் தரும் நகைச்சுவையாக காண்பிக்கின்றனர்[52]. டாடாடாடா என்ற இந்த சொல் முதன்முதலில், ட்ரைஸ்டன் ட்சாரா என்பவரால் 1916 இல் பயன்படுத்தப்பட்டது.[53] இந்த இயக்கம், 1916 முதல் 1922 வரை இயங்கியது, முதலாம் உலகப்போர் காலத்தில், கலைஞர்களை ஈர்த்தது.[54] டாடா இயக்கமானது ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் தொடங்கப்பட்டது, "நியடெர்டோர்ஃப்" அல்லது "நியெர்டோர்ஃப்லி" என்றும் அழைக்கப்படுகிறது - கஃபே வோல்டெய்ர்.[55] டாடாயிஸ்ட்கள், டாடா ஒரு சாதாரண கலை சார்ந்த இயக்கம் அல்ல, ஆனால் கலை எதிர்ப்பு இயக்கமாகும், சில நேரங்களில், கிடைத்த பொருட்களானவை, கிடைத்த கவிதையைப் போலவே பயன்படுத்தப்பட்டன. இந்த "கலை எதிர்ப்பு" இயக்கமானது, போருக்கு பிந்தைய வெறுமை நிலையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கலையின் மதிப்பை அழித்தலுக்கான முனைப்பானது, டாடா ஒரு நீலிச இயக்கம் என்ற எண்ணத்தைத் தந்தது. டாடா அதனுடைய சொந்த தயாரிப்புகளைப் புரிந்துகொள்ளும் வழிகளை உருவாக்கியதன் காரணமாக, பல சமகால கலை வடிவங்களிலிருந்து அதனை வகைப்படுத்த முடிவதில்லை. எனவே, அதனுடைய குழப்ப நிலையின் காரணமாக, அது சில நேரங்களில், மோடஸ் விவண்டி என்று வகைப்படுத்தப்படுகிறது.[54] இசை2007 ஆம் ஆண்டு வந்த ஒரு கட்டுரையில், தி கார்டியன் இதழானது, "...1977 -இன் கோடைகாலத்தில், ...பங்க்கின் நீலிச நடையானது, இங்கிலாந்தில் மிகவும் வியப்பூட்டும் ஒன்றாக இருந்தது என்று எழுதுகிறது."[56] செக்ஸ் பிஸ்டல்ஸ்' "காட் சேவ் தி குயின்", ஆகியவை, வேலையற்ற திருப்தியற்ற இளைஞர்களிடையே, 1970களின் பிற்பகுதியில் ஒரு ஸ்லோகனைப் போல இருந்து வந்தது.[57] சில கேங்க்ஸ்டா ராப் பாடல்களிலும், நீலிசம் வெளிப்பட்டது, "ஸ்ட்ரீட் கோட்" என்பதன் ஒருபகுதியாக வந்தது, ஆனால் அந்த இசையில் வெளியிடப்பட்ட பலவகையான பார்வைகளில் அல்லது தொலைநோக்கில் இது ஒரே ஒரு நோக்கு மட்டுமே.[58] ப்ளாக் மெட்டல் மற்றும் டெத் மெட்டல் இசையானது, பெரும்பாலும் நீலிச தீம்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.[59][60] [61] தொழிற்துறை இசை மற்றும் ரிவர்தெட் கலாச்சாரம் ஆகியவை மிகவும் நீலிசத்தன்மையை இயல்பாகவே கொண்டவை. குறிப்புகள்
குறிப்புதவிகள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia