இளையராஜாவின் சிம்பொனிஇளையராஜாவின் சிம்பொனி (Ilaiyarajaa's symphony) அல்லது “இளையராஜாவின் குழுப்பேரிசை” என்பது மேற்கத்திய இசைகளில் ஒன்றான ஒத்தின்னியம் முறையில், திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவரான மேஸ்ட்ரோ இளையராஜாவின் வெளியீடுகளை விவரிக்கிறது.[1]ஆசிய கண்டத்திலிருந்து, சிம்பொனியை முதன் முதலில் எழுதி, அவ்விசைத் தொகுப்பை வெளியிட்ட முதல் இசையமைப்பாளர் இளையராசா எனப் போற்றப்படுகிறார்.[2] 2025 ஆம் ஆண்டு மார்ச்சு 8இல் வெளியான இந்த சிம்பனி 35 நாட்களில் எழுதி முடித்ததாக இவர் கூறுகிறார். ஏற்கனவே, இத்தகையப் படைப்பினை இவர் எடுத்துள்ளார். இவரின் பல திரையிசைப் பாடல்களிலும், இதன் பகுதிகள்(movement) வழங்கப்பட்டுள்ளன. ஒத்தின்னியம்ஒத்தின்னியம் (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசைமுறைகளில் ஒன்றாகும். பெரும்பாலும் இந்த இசைமுறையானது, குரலோசை இல்லாமல் முழுக்கமுழுக்க இசைக்கருவிகளினால் இசைக்கப்பட்டு, இசைக்கோவையாக வழங்கப்படும். இந்தியாவிலும் சிம்பெனி சேர்ந்திசைக் குழுக்கள் இருக்கின்றன.[3] பெரும்பாலும் இக்குழுவில், 80 முதல் 100 பேர் இசை அமைப்பார்கள். இது மூன்று அல்லது நான்கு பகுதிகளாக(movement) இசைக்கப்படும்.[4] திரைப்புலங்கள்
19931993ஆம் ஆண்டில், தனது முதல் சிம்பொனியை அமைத்தபோது, அந்த இசைத்தொகுப்பில், இந்திய இசைமரபுக் கீற்றுகள் அதிகம் இருப்பதாக் கூறப்பட்டது. இதற்குரிய செலவு அதிகமாகும் என்பதாலும், அம்முயற்சி கைவிடப்பட்டதாகக் கூறுகின்றனர். அக்கால ஊடகங்களில், இதுகுறித்து பரபரப்புடன் பேசப்பட்டன. 2025![]() 2025ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8ஆம் நாள், இந்திய நேரம் இரவு 12.30 மணியளவில், இலண்டனிலுள்ள இவன்டிம் அப்போலா தியேட்டர் (Eventim Apollo Theatre[6]) அரங்கில், இராயல் பிலாரமோனிக் இசைக்குழுவால் (Royal Philharmonic Concert Orchestra)[7]) நேரடியாக இசைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு முன், இவ்விசை பதிவும் செய்யப்பட்டுள்ளது.[8] இந்த சிம்பெனிக்கு, தற்போது 82 அகவையுள்ள இளையராசா, அச்சமின்றி என்ற பொருள்படும் வேலியன்டு (Valiant) என்று பெயர் வைத்துள்ளார்.[9] இந்த சிம்பெனிக்கா இசைக்கலைஞர்களை வழிநடத்தியவர் பிரித்தானியரான மைக்கேல் தோம்சு (Mikel Toms[10], conductor) ஆவார். இந்த சிம்பெனி 45 நிமிடங்கள் இசைக்கப் பட்டது. மேலும் சில நிமிடங்கள் பிற இசைகளும் இசைக்கப்பட்டன. நிகழ்வின் முடிவில் இளையராச ஆங்கிலத்தில் கூறினார்.
அக்கூற்றின் தமிழாக்கம் வருமாறு;- “சிம்பனி அனுபவத்தை விவரிக்க இயலாது; அதனை அனுபவித்தால் தான் புரியும். அதை நீங்கள் அனுபவத்திருக்கிறீர்கள்”
இவ்விசை விவரம்அச்சமின்றி என்ற பொருள்படும் வேலியன்டு (Valiant) என்பது 'இளையராசாவின் சிம்பெனி 1' என இதற்கான செலவுகளை ஏற்ற 'மெர்குரி' பெயரிட்டுள்ளது. இந்த சேர்ந்திசைக் குழுவில் 77 இசைக்கலைஞர்கள் வாசித்துள்ளனர். அவர்கள் எந்த நேரத்தில் என்ன வாசிக்க வேண்டும் என்று இசைஞானி இளையராசா, அதற்குரிய இசைக்குறிப்பேட்டில் எழுதிக் கொடுத்துள்ளார்.
பிற விவரங்கள்இச்செய்திகள் இணையத்தில் கிடைத்த பலவித தரவுகளைக் கொண்டும், யூடிப்பு பதிவுகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ள. இந்த அரங்கு 3500 நபர்களுக்கானது. அரங்கு நிறைந்து இருந்தது. அரங்கினுள் முழுமையாக அலைப்பேசி உட்பட எந்த வித நிகழ்பதிவுகளைச் செய்ய அனுமதியளிக்கவில்லை. இருப்பினும், இடையிடையே அவ்வப்போது எடுக்க அனுமதித்தனர் என கலந்து கொண்டவர் கூறினர். ஒரு சிலரைத் தவிர, மற்றவர் அனைவரும் இந்தியர்களாகவே இருந்தனர். ஆனால், உலகின் பல பகுதிகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் கலந்து கொண்டு, இப்படைப்பினை கேட்டு மகிழ்ந்தனர். பொதுவாக மேற்கத்தியர் நிகழ்வின் முடிவில் மட்டுமே கைதட்டி பாராட்டுகளைத் தெரிவிப்பர். ஆனால், இந்நிகழ்வில் ஒரு இசையமைவு முடிந்ததும், கேட்டவர் கைத்தட்டி தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர். இதனைக் கண்ட நடத்துனரான மிகைல் சற்று திகைப்படைந்து, இளையராசாவைப் பாரத்ததாகக் கூறுகின்றனர். பிதோவனுக்கு பிறகு, இசைக்கருவியை இசைக்காமலேயே இசையை உணர்ந்து, எந்தெந்த இசைக்கருவி எப்பொழுது, எப்படி, எவ்வளவு நேரம் இசைக்க வேண்டும் என்பதை, இசைக்குறிப்பேட்டில் இளையராசா எழுதித் தந்ததாக, இந்நிகழ்ச்சிக்கு பொருளதவி அளித்த மெர்குரி நிறுவனத்தார் கூறினர். காட்சியகம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia