இ. எம். ஜி. யாதவர் மகளிர் கல்லூரி
இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரி (E.M.G. Yadav College) என்பது தமிழ்நாட்டில் மதுரை திருப்பாலையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியாகும். திருப்பாலை நத்தம் சாலையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி அமைந்துள்ளது. "மகளிர் அறிவு, குடும்ப உயர்வு" என்ற தாரகமந்திரத்துடன் பொருளாதரத்தில் பின்தங்கிய பெண்களின் கல்வியறிவு உயர உதவுகிறது. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை கலை அறிவியல் பிரிவுகளில் வழங்கிறது. வரலாறு1974ல் இ.எம். கோபாலகிருஷ்ண கோன் என்பவரால் தொடங்கப்பட்டு, இ.எம்.ஜி.சௌந்தர ராஜன் என்பவரின் நிர்வாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாதவர் சமுதாயம் மட்டும் அல்லாது பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏனையோரும் பயன்படும் விதத்தில் கல்விப் பணியைத் தொடங்கியது. ஆரம்பத்தில் மதுரை தல்லாகுளத்தில் இ.எம்.ஜி. கல்யாண மண்டபத்தில் பல்கலைக்கழக முன் பட்ட வகுப்புகளுடன் (Pre-University courses) வகுப்புகளைத் தொடங்கியது. பின்னர் 1980ல் தற்போதைய திருப்பாலை வளாகத்திற்கு மாற்றப்பட்டது.[2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia