ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனம்
ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனம் இலங்கை யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம்.[1] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் இது அமைந்துள்ளது. பண்பாடுகளுக்கு இடையேயான தொடர்புகளுக்கு உதவுவதும் இறந்தகால, நிகழ்காலப் பண்பாடுகள் குறித்த ஆய்வுகளை ஊக்குவிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.[2] இந்த நிறுவனத்தை 1981 மே 10 ஆம் நாள் ஜேம்சு டி. ரத்தினம்[2] தனது காலஞ்சென்ற மனைவி ஈவ்லின் விஜேரத்ன இரத்தினத்தின் (இறப்பு:13 செப்டம்பர் 1964) நினைவாக நிறுவினார்.[3] வரலாறுஜேம்சு டி. ரத்தினம் பல்கலைக்கழக அன்பளிப்புக்கள், ஆய்வாளர்கள், முன்னணிச் சட்டத்துறை சார்ந்தோர், வணிகத் துறையினர் போன்றோரிடமிருந்து பெற்ற ஏராளமான நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் சேகரித்து வைத்திருந்தார். ஆய்வாளர்கள் பலர் இவரது நூலகத்தைப் பயன்படுத்தி வந்தனர்.[4] இது பின்னர் அமெரிக்க மிசனின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நூல்களை ஆய்வுத் தேவைகளுக்காகக் களஞ்சியப்படுத்திப் பேணுவதற்காக ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஜேம்சு ரத்தினத்தின் மனைவியின் பெயரால் ஈவ்லின் ரத்தினம் நிறுவனம் என அழைக்கப்பட்டது.[4] இந்நிறுவனம் ஜேம்சு ரத்தினம் ஆய்வு, கல்வி என்பவற்றின்மீது கொண்டிருந்த விருப்புக்குச் சான்றாகவும், கல்விக்கான ஊக்கப்படுத்தலுக்காகவும் அமெரிக்க மிசனின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.[4][5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia