உக்கடம் பேருந்து முனையம்
உக்கடம் பேருந்து நிலையமாக பிரபலமாக அறியப்படும் உக்கடம் , கோயம்புத்தூர் நகரத்தின் பேருந்து முனையங்களில் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டு காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நெரிசல் குறைக்க இது திறக்கப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் அருகிலுள்ள இடங்களுக்கும் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் பாலக்காடுக்கு செல்லும் புற நகர பேருந்துகளுக்கு இடமளிக்கும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. வாலாங்குளம், ஒரு குளம், இந்த குளம் மூடப்பட்டு பேருந்து நிலையத்திற்கான இடம் உருவாக்கப்பட்டது. தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்கும் பேருந்துகள் இங்கிருந்து ஓடத் தொடங்குகின்றன. அனைத்து நகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இந்த பேருந்து நிலையத்திலிருந்து ஓட துவங்குகின்றன அல்லது கடந்து செல்கின்றன. தமிழ்நாட்டின் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் பயண நேரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு மேலங்கி அறை, கழிப்பறைகள், ஓய்வு அறை, பார்க்கிங் வசதிகள், டிவி மற்றும் எஸ்டிடி சாவடிகளை உள்ளடக்கியது. மேலும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பராமரிக்கவும் ஏதுவான மையம் உள்ளது. [1] மார்க்கம்
செல்லுமிடங்கள்
இணைப்புகள்இந்த பேருந்து முனையம் ,4.3 கி.மீ தொலைவிலுள்ள கோயம்புத்தூர் மத்திய பேருந்து முனையம் , வடகிழக்கில் 1.6 கி.மீ தொலைவிலுள்ள கோயம்புத்தூர் தொடர் வண்டி நிலையம் ,5.1 கி.மீ தொலைவிலுள்ள புதிய பேருந்து நிலையம் .,8.3 கி.மீ தொலைவிலுள்ள சிங்கநல்லூர் பெருந்து முனையம், 12.7 கி.மீ. தொலைவிலுள்ள கோயம்புத்தூர் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்புகள்2.[[1]] |
Portal di Ensiklopedia Dunia