உதயதாரகைஉதயதாரகை (Morning Star) ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதலாவது செய்திப் பத்திரிகையும் ஆகும்.[1] ஆகும். இது அமெரிக்க இலங்கை மிசன் மூலம் வெளியிடப்பட்டது. இதன் முதலாவது இதழ் 1841 சனவரி 7 இல் வெளிவந்தது.[1] இப் பத்திரிகை தமிழில் உதயதாரகை என்றும் ஆங்கிலத்தில் Morning Star என்றும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது. முதல் ஆசிரியர்கள்இப்பத்திரிகை மானிப்பாயைச் சேர்ந்த நேத்தன் ஸ்ட்ரோங் என்ற அம்பலவாணர் சிற்றம்பலம் (இறப்பு: 14 பெப்ரவரி 1894) என்பவரால் வெளியிடப்பட்டது.[2] இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர். இதில் எழுதப்பட்ட ஆசிரியத் தலையங்கள் பலவும் ஹென்றி மார்ட்டினாலேயே எழுதப்பட்டதாகத் தெரிகிறது. பஞ்சதந்திரக் கதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதயதாரகையில் வெளியிட்டார்.[3] இதற்கு முன்னர் இலங்கையில் தொடங்கப் பட்ட பத்திரிகைகள் அனைத்துக்கும் ஆங்கிலேயரே ஆசிரியர்களாக இருந்து வந்தனர். இதனால் இலங்கையரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை என்ற பெயரும் உதயதாரகைக்கே உரியது. கரோல் விசுவநாதபிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை ஆகியோரும் உதயதாரகையில் ஆசிரியராகப் பணிபுரிந்தனர். பத்திரிகையின் நோக்கம்உதயதாரகை முதல் இதழின் ஆசிரியத் தலையங்கத்தில், ".......உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள் பற்றியும் அச்சடிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்புகள்
உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia