உதயம் (மாத சஞ்சிகை)
![]() உதயம் இலங்கையில் 1954 முதல் 56 வரை வெளியான ஒரு மாதிகை. நோக்கம்இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே தமிழ் பண்பாடு, கலாசாரம் முதலியவைகளைப் பரப்புவதற்கும், காலத்திற்கேற்ப புதிய கருத்துக்களைப் படைத்து தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் இலக்கிய சஞ்சிகைகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் வெளிவந்த மாத சஞ்சிகையே உதயம். ஆசிரியர்இதன் ஆசிரியர் வை. அநவரத விநாயகமூர்த்தி. முதல் இதழ் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஜயவருஷம், சித்திரை மாதம்) வெளிவந்தது. 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் இச்சஞ்சிகை வெளிவந்தது. தமிழ் இலக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இலக்கியம், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவைகள், பாலர் மன்றம், மாதர் பகுதி முதலிய பல்வேறு அம்சங்களைக் கொண்டு வெளிவந்த 'உதயம்' சஞ்சிகை 'இரண்டு ஆண்டு மலர்களை'யும் வெளியிட்டது. கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி என்று பல போட்டிகளை நடத்தி இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பரிசில்களையும் வழங்கி கௌரவித்தது. சிற்பி சரவணபவன், கச்சாயில் இரத்தினம், கே. டானியல் போன்ற சிறுகதை எழுத்தாளர்களும் , செ. வேலாயுதபிள்ளை, வன்னியூர் வேலன் போன்ற கவிஞர்களும் பரிசு பெற்று உற்சாகமடைந்து பெரும் எழுத்தாளர் ஆனானோரில் சிலராவர். உதயத்தில் எழுதியவர்கள்வித்துவான் பண்டிதர் கா. பொ. இரத்தினம், வித்துவான் க.கி. நடராஜன், வித்துவான் எப். எக்ஸ். சி. நடராசா, வை. சுப்ரமணியசிவம், லஷ்மி வேலுப்பிள்ளை, வை. ஆநவரத விநாயக மூர்த்தி, செ. வேலாயுதபிள்ளை, மஹாகவி, முருகையன், கி. வா. ஜகந்நாதன், பரமஹம்ஸதாசன், நாவற்குழியூர் நடராசன், சில்லையூர் செல்வராசன், ஈழத்துச் சோமு, அ. ந. கந்தசாமி, கச்சாயில் இரத்தினம், தாழையடி சபாரத்தினம், கே. டானியல், பேராசிரியர் க. கைலாசபதி என்று பலர் எழுதினர். சித்திரங்கள்இலங்கையின் சித்திரக் கலைஞர்களான சி. சிவஞானசுந்தரம், அம்பிகைபாகன் ஆகியோர் உதயத்தின் இலக்கியப் பணியில் இணைந்து பணியாற்றினர். கருத்துகள்உதயம் பற்றி சில பத்திரிகைகளின் கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன.
|
Portal di Ensiklopedia Dunia