தமிழில் பெயரை பெயரை வேறுபடுத்திக் காட்டுவன வேற்றுமை (தமிழ் இலக்கணம்). தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர் தமிழில் வேற்றுமையை ஏழு வகையாக மட்டும் கொள்ளும் வழக்கம் இருந்தது. [1] தொல்காப்பியர் இதனை எட்டு எனக் காட்டினார். [2] எட்டாம் வேற்றுமை என எண்-வரிசையில் பெயரிடப்பட்டுள்ள இதனை விளி வேற்றுமை என இதன் செயல்பாட்டு நோக்கிலும் பெயரிட்டு வழங்கி வந்தனர். எழுவாய் வேற்றுமையில் வினையாற்றும் பெயர் அழைக்கப்பட்டு விளி கொள்ளும்போது எட்டாம் வேற்றுமையாக மாறும். [3] தொல்காப்பியத்தில் பெயர்ச்சொல் எட்டாம் வேற்றுமையாக மாறும் பாங்கு தனியாக 27 நூற்பாக்களில் விளக்கப்பட்டுள்ளன.
தொல்காப்பியருக்கு முந்திய காலத்தில் விளி-வேற்றுமையைப் பெயரது விகாரம் எனக் கருதினர். [4] [5] [6]
நன்னூலானது தொல்காப்பியர் வேற்றுமை எட்டு எனக் கொண்டதை வழிமொழிகிறது. [7] விளி கொள்ளும்போது இன்னின்ன ஈற்றெழுத்துச் சொற்கள் இன்னின்னவாறு திரிந்து விளி கொள்ளும் எனக் காட்டுகிறது.
விளி [8] [9]கொள்ளும் உயிரீறு சொற்கள்
திணை |
விகுதி [10] |
சொல் |
சேய்மை விளி
|
உயர்திணை [11]
|
இ
ஐ
ஓ
உ [12]
இ [13]
இ [14]
ஐ [15]
|
நம்பி
நங்கை
கோ
வேந்து
கணி
தோழி
அன்னை
|
நம்பீ
நங்காய்
கோவே
வேந்தே
கணியே
தோழீஇ
அன்னா
|
விளி கொள்ளும் மெய்யிறுதிச் சொற்கள்
- [ன்], [ர்], [ல்], [ள்] அல்லாத மெய்யெழுத்துக்கள் விளி கொள்ளா.
- தான், யான், நீயிர், அவன் [16], யாவன் [17] - என்பன விளி கொள்ளா.
திணை |
விகுதி |
பெயர் |
சேய்மை விளி |
அண்மை விளி
|
உயர்திணை
|
அன்
ஆன்
ஆன் (தொழிற்பெயர்)
ஆன் (பண்புகொள் பெயர்)
அளபெடைப் பெயர்
முறைப்பெயர்
[ர்]
[ல்]
[ள்]
|
சோழன், சேர்ப்பன், ஊரன்
சேரமான், மலையமான்
உண்டான்
கரியான்
அழாஅன் [18]
மகன்
மகாஅர், சிறாஅர்
தோன்றல்
மக்கள்
|
சோழா, சேர்ப்பா, ஊரா
சேரமான், மலையமான் (இயல்பு)
உண்டாய்
கரியாய்
அழாஅன்
மகனே
மகாஅர், சிறாஅர்
தோன்றால்
மக்காள்
|
சோழ, சேர்ப்ப, ஊர
-
-
-
-
-
-
-
-
|
விரவுப் பெயர்கள்
உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவான பெயர்களை விரவுப்பெயர் என்பர்.
பெயர் |
விளி
|
சாத்தி |
சாத்தீ
|
பூண்டு [19] |
பூண்டே
|
தந்தை |
தந்தாய்
|
சாத்தன் |
சாத்தா
|
கூந்தல் [20] |
கூந்தால்
|
மகன் |
மகனே
|
விளி ஏற்கும் அஃறிணைப் பெயர்கள்
'ஏ' என்னும் விளி-உருபு ஏற்று வரும். எடுத்துக்காட்டு:
பெயர் |
விளி
|
மரம் |
மரமே
|
அணில் |
அணிலே
|
நரி |
நரியே
|
சிறப்புக் குறிப்புகள்
- அம்மா சாத்தா - என்னும் தொடரில் அம்மா என்பது விளி. இது 'அம்ம' என்னும் சொல்லின் நீட்டம் [21]
- நம்பி என்பதன் அண்மை விளி நம்பி. சேய்மை விளி நம்பீ. மிகு-சேய்மை விளி நம்பீஇ. [22]
- தமன், தமள், தமர், நமன், நமள், நமர், நுமன், நுமள், நுமர், எமன், எமள், எமர், எம்மான், எம்மாள், எம்மார், நும்மான், நும்மாள், நும்மார் முதலான தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் விளி ஏற்பதில்லை. [23]
அடிக்குறிப்பு
- ↑ வேற்றுமைதாமே ஏழ்' என மொழிப. (தொல்காப்பியம் 2-62)
- ↑ விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே (தொல்காப்பியம் 63)
- ↑ விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு, தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப (தொல்காப்பியம், சொல்ல்லதிகாரம் -118)
- ↑
"ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பான் பெயரது விகாரமென்று
ஓதிய புலவனு முளனொரு வகையான்
இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்"
- ↑ அகத்தியனார் நூற்பா
- ↑ நன்னூல் நூற்பா 291 சங்கர நமச்சிவாயர் உரை[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑
<poe3m>ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை (நன்னூல் 291)
பெயரே ஐ ஆல் கு இன் அது கண்
விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை (நன்னூல் 292)</poem>
- ↑ பாகுபாடு தொல்காப்பியம் காட்டியுள்ள முறைமை
- ↑ தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றின் உரை மேற்கோள்கள்
- ↑ ஏனை உயிர்கள் விளி கொள்ளா
- ↑ அண்மைச்சுட்டு ஆயின் அனைத்தும் இயல்பாந் வரும்
- ↑ உகரம் குற்றியலுகரம்
- ↑ உயர்திணைப் பாங்கில் விளி கொள்ளாத பெயர்
- ↑ அளபெடை
- ↑ முறைப்பெயர்
- ↑ சுட்டுமுதற் பெயர்
- ↑ வினாவின் பெயர்
- ↑ அக்கினி தேவன்
- ↑ பாட்டனின் தந்தையாகிய பூட்டன்
- ↑ கூந்தலை உடையவள்
- ↑ தொல்காப்பியம் 2-150
- ↑ தொல்காப்பியம் 2-149
- ↑ தொல்காப்பியம் 2-151